Wednesday 27 June 2007

காட்டிக்கொடுப்பின் கண்கட்டி வித்தை!

புலிஎதிர்பின் உழைப்பு குளிர்காய வைக்கப் போவது யாரை?

மக்களையா? சிங்களஇனவாதத்தையா?

ஒரு கோடு பெரிதோ, சிறிதோ ஆக்குவதற்க்கு தேவைப்படப் போவது இன்னொரு கோடே! எனவே நன்மையாலோ, இல்லை தீமையாலோ புலி என்ற கோட்டை பெரிதோ, சிறிதோ ஆக்குவதற்க்கு அந்த இன்னொரு கோடு எங்கே?

உங்கள் கொள்கைகளுக்கு நேர்மை இருந்தால், இன அவலத்துக்கு நிரந்தரமான தீர்வொன்று உங்களால் இனங்காட்டப் பட்டாமலே, புலிதான் மக்களின் துன்பம் என்று முறையிடுவது பொருத்தமாகுமா?

பிறந்த குழந்தைக்கே மரணத்தை தீர்ப்பாய் எழுதும் சிங்களந்தின் இனவாதக் கொடுமையை விட்டு விட்டு. பேச்சுரிமை புலிகளால் மறுக்கப் படுகிறது என்னும் குற்றச்சாட்டுக்குத்தான் அவசர நீதிவேண்டிக் கிடக்கிறதா?

புலிஎதிர்ப்பும் சிங்களத்தை வசை பாடுவது தம் இரகசிய தொடுப்புக்கள் வெளியால் தெரிவதை மறைக்கின்ற நடவடிக்கைதான். இல்லை நீங்கள் புதிதயாய் வசைபாடித்தான் சிங்கள எதிர்ப்புக்கு தமிழரில் கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற நிலைதான் உள்ளதா?

உங்கள் சிங்களவசைபாடலின் பயன் சிங்களத்துக்கு புதிதாய் ஒன்றும் ஆக்கப் போவதில்லை. பதிலுக்கு நன்மை மட்டு உண்டு, அவர்களின் கூலிகள் என்ற நிலையில் புலித்துவேசம் மக்களிடம் விலைப்படுவதைக் காட்டிலும், அரசியல் தொடர்புசார்பிலாக் கருத்து என்ற வேடம் கிடைத்து விடும். அல்லவா உன்கள் புலம்பல்களுக்கு. இதனால் தானே ஒவ்வொரு துரோகக்கூட்டமும் மற்ற துரோகக் கூட்டத்தை சிங்களத்தின் அடிவருடிகளாக முழங்க வேண்டிய தேவை வேறு இருக்கிறது.
தமிழ்வட்டம் தமிழர்களுக்கு விடுகிறது பட்டம்.

எழுத்து சோத்துக்கே என்றாலும் சொல்ல பேருக்கு ஜனனாயகம்.

85 நாட்கள் வவ்வால் பிழைப்புக்கு வஞ்சம் தீர்கக ஜனனாயகம் என்ற வேசம் ஒன்றுதான் கிடைத்ததா?

செஞ்சோலைச் சிறார்களின் மரணத்தில் உலகே வாய் அடைத்து நிற்க்க, புலிஎதிர்ப்புக்கு கதை, வசனம் எழுதிய உங்கள் அயோக்கியபுத்தியை நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.

கருத்தால் புலியை வெல்ல வக்கு இருந்தால் வேண்டுமா? பினாமி, சுனாமி பாஸிசம், புலியிசம்.

Monday 25 June 2007

பொம்மை ராடர்களை வளங்கி தேற்ற நினைத்த இந்தியாவுக்கு, சிங்களம் உண்மை ராடர்களை வாங்கிப் பதிலடி!!!

வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் வகையிலான ஜே.வை-11 என்ற முப்பரிமாண ராடாரை சிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ளதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பு சிங்கள ஊடகமான "லக்பிம" வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
சீனாவின் எலெக்ரோனிக் ரெக்னோலொஜி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ஜே.வை-11 (JY-11) ரக தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறியும் முப்பரிமாண ரடார்களையும் அரசு கொள்வனவு செய்துள்ளது. இந்த ராடார்களை கொள்வனவு செய்வதற்கு அரசு கடந்த ஆண்டு கொள்வனவு பத்திரத்தை சமர்ப்பித்ததுடன் முற்பணத்தையும் செலுத்தியிருந்தது.
எனினும் சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் தொடர்பாக இந்தியா கவலை தெரிவித்ததனால் அது கைவிடப்படடிருந்தது. ஜே.வை-11 ரடார் தொகுதி எஸ்- அலைவரிசை (S-Band) கொண்டது.
இது தாழ்வாக பறக்கும் வானூர்திகளைக் கண்டறியக்கூடியதுடன் அது தொடர்பான தகவல்களை வான் பாதுகாப்பு தொகுதிக்கும் வழங்கக்கூடியது.
இதனை வவுனியாவில் பொருத்தினால் அது தமிழ்நாட்டில் உள்ள வானூர்திகளின் நடமாட்டத்தையும் கண்டறியக் கூடியது. ஜே.வை-11 ராடார்கள் மூன்று நகர்த்தக்கூடிய பகுதிகளைக்கொண்டது.
எனவே விரைவாக பொருத்தக்கூடியதும் பிரிக்கக்கூடியதுமாகும்.
5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ராடார் தொகுதி 160 கி.மீ தூரவீச்சு கொண்டது. இந்த ராடார்கள் விரைவில் சிறிலங்காவை வந்தடைய உள்ளன, அதனை நிறுவுவதற்கான ஆயத்த வேலைகளை சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த மே மாதம் அமெரிக்காவின் நிபுணர்கள் சிறிலங்காவிற்கு வந்த போது வான் படையினர் தமது எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளில் வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகளை பொருத்துவது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தியிருந்தனர். அமெரிக்க தயாரிப்பான வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஸ்ரிஞ்சர் ஏவுகணைத் தொகுதியே (Hellfire missile system) எம்ஐ-24 உலங்குவானூர்திகளில் பொருத்துவதற்கு மிகவும் செயற்திறன் மிக்கது என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
மேலும் கட்டுநாயக்க வான்படை தளத்தில் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நடைபெற்ற 3 மாதத்தின் பின்னர் வான் பாதுகாப்பு பொறிமுறை இயங்க ஆரம்பித்துள்ளது. ராடாருடன் இணைக்கப்பட்ட வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் முக்கியமான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. முக்கியமான படை நிலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் இலகுரக வானூர்திகள் கட்டுநாயக்கா வான்படை தளத்தின் மீது குண்டுகளை வீசிய போது இந்த துப்பாக்கிகள் எதுவும் இயங்கவில்லை. தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறிய என கொள்வனவு செய்யப்பட்ட இந்திரா-02 ரக ராடார்கள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்பு குறைபாடுகள் வான் பாதுகாப்பு தொடர்பான முழுமையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேவையை வான்படைக்கு ஏற்படுத்தியிருந்தது. முன்னறிவிக்கும் பொறிமுறை, சுடுவலு கட்டுப்பாட்டு தொகுதி போன்றன முழுமையான மறு சீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. சிறிலங்கா வான் படையினரின் தேவைகளுக்குரிய பரிந்துரைகளை வழங்குவதற்கென அமெரிக்க மற்றும் இந்திய நிபுணர்கள் குழுவும் சிறிலங்காவிற்கு வந்திருந்தது. இராணுவ முக்கியத்துவமுள்ள பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள ராடாருடன் இணைக்கப்பட்ட வான் எதிர்ப்பு துப்பாக்கிகளின் திருத்த வேலைகளே இங்கு முதன்மையாக கருதப்பட்டது. தற்போது அவற்றில் பல திருத்தப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் ராடாருடன் இணைக்கப்பட்டுள்ளன, இந்த ராடார்களின் வானூர்திகளை கண்டறியும் தூரவீச்சு 32 கி.மீ ஆகும். இந்த வான் எதிர்ப்பு சாதனமானது சுயமாகவே இலக்கை நோக்கி வான் எதிர்ப்பு சாதனத்தை இயங்கவைக்க கூடியது. வான் எதிர்ப்பு சாதனங்களை மீண்டும் இயங்க வைத்துள்ளதனால் அனைத்துலக வானூர்தி நிலையத்தை எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாளில் இருந்து இரவில் இயங்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

<நன்றி புதினம்>

Friday 22 June 2007

பற்களை பணத்துக்கு விற்றுவிட்ட பாம்புகளின் போர்ப் பிரகடனம்!

1. புலிஎதிர்ப்பு என்பது உண்மையான மனிதாபிமான அக்கறையினது முறையீடுகள்தானா?
போர் அழிவுகளிடம் தோற்றுப்போய் உள்ள, இந்த சிங்களச் சக்தியின் அரசியல் குணம் என்பது, இத்தகைய சூழ்நிலைகளுக்கே நிமித்தமுடியாத நாய்வாலாகவே இருக்கின்ற போது;
புலிஅல்லாத வேறு
எந்த மாற்றுநிலமைகளாலாவது, சிங்களத்தை இந்த அளவு தூர நெருக்கத்துக்கு கொண்டுவர முடியுமா?
தமிழர் தரப்பின் வாழ்வுகள் இத்துணை மனித அவலங்களின் விலைகொடுப்புக்களுக்குப் பின்னரும் ஒரு முற்போக்குத்தனமான தீர்வையேனும் காட்டுதலுக்குகூட முன்வைக்க துப்பில்லாத சிங்களவாதத்தின் நயவஞ்சக அரசியல்; தன் பிடிவாதத்தனத்தை நியாயப் படுத்த புலிகளை பயங்கரவாதிகளாக மட்டம் தாழ்த்துகின்ற முயற்சி எந்த வகையிலும் தகுதியானதாகுமா? அப்படி சொல்லப்படுவதானது புலிப் பயங்கரவாததின் கரங்களில் தமிழர்களை ஒப்படைத்து விடக்கூடாது என்ற அக்கறைதான் அவர்களை இந்த சிலுவை சுமக்க வைப்பிக்கிறது என்பதையே சொல்லாமல் சொல்லுகிறதல்லவா அந்த வாதம் .
இந்த சிங்கள ஓநாய்களுக்கு தமிழ்வெள்ளாடுகளில் கொண்ட உணவுப் பாசம் அல்லவா இப்படிக் கதைக்க வைப்பிக்கிறது.
இதை உணரமுடியாத அறிவுத்தராதரத்தில் இருந்து கொண்டு, புலிஎதிர்ப்புவான்கள் தமது பகுத்தறிவை, வாங்கிய பணக்கட்டுக்களின் மேல் மல்லாக்காக படுக்கவைத்து விட்டு, கள்ளப் பகுத்தறிவை எம்மிடம் கொட்டி விற்க்க அல்லவா வருகிறார்கள்.

புலிப்பிடிவாதங்கள்தான் மக்கள் அவலங்களுக்கு மூல வேர் என வாதிடுகிறார்கள்.

தமிழீழம் என்ற சொல்லில் இருந்து ஒருபடியேனும் புலிகள் இறங்கியது கிடையாது என சொல்லப் படுகிறது,
எந்தத்தரப்பாலுமே ஏற்றுக்கொள்ளப் படமுடியாத படுபிற்போக்குத் தனமான தீர்வில் இருந்து ஒருபடியேனும் ஏறாமல் நிற்க்கிற சிங்களப்பிடிவாதம்.

ஏதோ இவர்கள் தரமான ஒன்றைக் கொடுத்து, தட்டிவிடப் பட்டிருந்தால் ஆவது புலிகள் பிடிவாதமும் பேசப் படும் தகுதியை எட்டி இருக்கும், எனவே ஒன்றையுமே கொடுத்துப் பாராமல் அவர்கள் வாங்கமாட்டார்கள், என்று சொல்வதானது முட்டாள்களிடமே எடுபடும் பேச்சுக்கள் அல்லவா?இவர்களின் புலிஅவதூறுகளை தோள்களில் சுமந்து புலம், புலமாக விற்கத்திரியும் புலித்துவேசிகளுக்கு இவை எல்லாம் அவர்கள் பகுத்தறிவுக்கு உறைக்கப்படவே மாட்டாதா?

இல்லை புலிகள் துவசத்தின் பின்புதான் இவர்கள் வீரங்கள் பேசப்படுவதென்று விரதம்தான் ஏதும் இருக்கின்றதா?அப்போதும் இவர்களால் படமெடுத்து சீற முடியாதே! அப்படி என்றால் நக்கல்போராட்டத்தினூடுதான் வாங்கித்தருவார்களா?

Tuesday 19 June 2007

வளையாமையின் வரலாறு பிரபாகரன் என்கிறார் கோத்தபாயா!

"நிலங்களைக் கையகப்படுத்துதல் அல்ல எமது போரின் குறிக்கோள்!
புலிகளைப் பலவீனம் செய்வதே அதன் உண்மையான எண்ணமாகும்" என் கொழும்பு வார இதளுக்கு பகருகிறார், கோத்தபாயா.

கொழும்பு வார ஏடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:
முன்னைய ஈழப் போர்களின் போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இராணுவ உத்தி என்பது இராணுவத்தினர் தொடர்பானது. இராணுவத்தினருக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். இராணுவ உத்தியை வகுப்பது என்பது முற்றாக முப்படைகளின் தளபதிகளிடம் உள்ளது. மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட உடன், நிலைமைகளை முழுமையாக ஆய்ந்து உத்திகளை வகுத்தோம். இராணுவ உத்திகளில் எதுவித அரசியல் தலையீடும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இராணுவத்தினரை முப்படைகளின் தளபதிகளே கையாளுவதால் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. முதல் முறையாக தற்போதைய முப்படைகளின் தளபதிகளும் முன்னைய பாரிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இராணுவத்தின் மிகக் கீழ் நிலையினரைக் கூட இராணுவ உத்தியில் பங்கேற்க வைத்துள்ளோம்.
முன்னைய இராணுவ நடவடிக்கைளின் மூலம் தற்போதைய இராணுவ தளபதி, எதிரிகளின் வியூகம், எதிரிகளின் இருப்பிடம் ஆகியவற்றை நன்கு அறிந்து வைத்துள்ளார். களத்தை நன்கு கற்றவர். எதுவிதத் தலையீடும் இல்லாமல் இராணுவம் தனது வளங்களைப் பயன்படுத்த அனுமதித்திருக்கிறோம். இத்தகைய அணுகுமுறையால் நல்ல வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். உதாரணமாக கிழக்கை எடுத்துக் கொண்டால் முன்னரை விட எதிரிகளின் ஆயுதங்களை பெருமளவில் நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு இழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறோம். கடந்த 3 மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உடல்களை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம். விடுதலைப் புலிகள் பெரும் எண்ணிக்கையில் சரணடைந்தும் வருகின்றனர். முன்னரை இதுவிட மாறுபட்ட நிலைமைகளையே இது எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் சிறந்த நிர்வாகம், சிறந்த தந்திரோபாயம், சிறந்த தலைமைத்துவமே காரணம். அதனாலேயே நமக்கு இழப்புகளும் குறைவு.
நாம் டாங்கிகளை இழக்கவில்லை- வானூர்திகளை இழக்கவில்லை- இராணுவத்தினரை இழக்கவில்லை என்று பல இராணுவ அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டுணர்வு அதி உயர்வானது. அத்தகைய உயர்ந்த கட்டுப்பாட்டுணர்வு இருக்கும் நிலையில் நாம் நல்ல முறையில் இயங்க முடியும். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுணர்வை நீடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. எவர் ஒருவரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுணர்வை- மன உறுதியைச் சீர்குலைக்கக் கூடாது. இதுவிடயத்தில் நாம் கவலை கொள்கிறோம். நீங்கள் இராணுவத்தினரினது மன உறுதியை சீர்குலைத்தால் இராணுவத்தினர் தங்களது உயிரைக் கொடுக்க நேரிடும் என்பதை நீங்கள் நினைவு கொள்ளுங்கள். எப்போது இராணுவ வீரரின் மன உறுதியை நீங்கள் சீர்குலைக்கிறீர்களோ அப்போது நம்பிக்கையோடு எதிரிக்கு முகம் கொடுக்க முடியாது போய்விடும். எப்போது மன உறுதியோடும் கட்டுப்பாட்டுணர்வோடும் நிற்கிறானோ அப்போது நம்பிக்கையோடு எதிரியை எதிர்கொள்வான். ஆகையால் சில்லறை இலாபங்களுக்காக அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட எவருமே இராணுவத்தினரின் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் சீர்குலைக்க வேண்டாம்.
இராணுவம் சுதந்திரமாக இயங்கும் அதே நேரத்தில் அரசியல் ரீதியாக நாட்டுக்குத் தலைமை வகிக்கும் அரச தலைவருக்கு இராணுவ உத்தி தெரியாது. ஆகையால் அவர் தலையிடாமல் இருக்க வேண்டும். முப்படைகளின் தலைவராக இருக்கும் அரச தலைவர் வழிகாட்டுதல்களை மேற்கொண்டாலும் போர் நடவடிக்கைகள், ஆட்சேர்ப்பு, உத்திகள் அனைத்துமே இராணுவத்தினரிடம்தான் இருக்க வேண்டும்.
இந்த நாட்டை ஒரு பயங்கரவாத இயக்கம், பிளவுபடுத்தி அறவிடுதலை அனுமதிக்க முடியாது. நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அரச தலைவரின் கடமை. அதற்காகத்தான் மக்கள் அவரைத் தெரிவு செய்துள்ளனர். பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிலங்காவின் இராணுவச் செலவு அதிகம் இல்லை. இராணுவத்துக்கு மிகக் குறைவாக செலவு செய்து அதிக அபிவிருத்தியைப் பெறுவதுதான் நாட்டுக்கு நன்மையானது. அதே நேரத்தில் அண்மைய அனைத்துலக நடப்புகளைப் பார்த்தால் ஒவ்வொரு நாடுமே தனது பாதுகாப்பு குறித்து கவலை கொள்கிறது. உலகம் முழுவதும் கொடிய பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களிடையே வேறுபாடு ஏதும் இல்லை. அவர்கள் ஒரு நாட்டின் இராணுவச் செலவுகளை மட்டும் அதிகரிக்கச் செய்யவில்லை. பொருளாதார ரீதியாகவும் பெரும் நாசம் செய்கின்றனர். காப்பீடுகள், கடனுதவிகள் என அனைத்துலக அமைப்புகளையும் நெருக்கடிகளுக்குள்ளாகின்றனர். இந்தச் சூழ்நிலைகளினால் நாம் நமது நாட்டின் பாதுகாப்பு குறித்து அலட்சியமாக இருந்துவிட முடியாது. நமது நாட்டின் பாதுகாப்பை நாம் தியாகம் செய்துவிட முடியாது.
இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து அனைத்துலகிலிருந்து சிறிலங்காவை தனிமைப்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சிப்பதை நாங்கள் புத்திப்பூர்வமாக கையாளுவோம். ஆனால் அதற்கு முன்னர் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது. ஏனெனில் வரலாறு அதனையே நமக்குக் காட்டியுள்ளது. எத்தனை அரச தலைவர்கள்- எத்தனை தலைவர்கள் இதுவிடயத்தில் இறங்கியிருக்கிறார்கள். கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.
பிரபாகரனின் மனநிலையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர் வளையாத மனிதர்.
தனியரசு என்பதைத் தவிர வேறு எந்த ஒரு வார்த்தையையுமே ஒப்புக் கொள்வதாக அவர் சொன்னதே இல்லை.
நமது தலைவர்களை அவர் தவறாகப் புரிய வைத்திருக்கிறார். அதே நேரத்தில் தனது சவாரிக்காக வெளிநாட்டுத் தலைவர்களை பிரபாகரன் கையாளுகிறார்.
இதனை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் எதனையும் மூடி வைத்திருக்கவில்லை. பேச்சுவார்த்தைகளுக்காகவும் அரசியல் தீர்வுகளுக்காகவுமான கதவுகள் திறந்தே இருக்கின்றன. என்ன சொல்ல வருகிறேன் எனில், பிரபாகரன் அனைத்து நேரங்களிலும் என்ன செய்வார் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.
எப்பொழுதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திர ரீதியாக அழுத்தங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் சிறிலங்கா அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு பிரபாகரன் தள்ளிவிடுகிறார். ஆகையால் விடுதலைப் புலிகளின் மனோநிலையை புரிந்து கொள்வது என்பது முக்கியமானது. அந்த உத்தியை வீழ்த்துவதை விட அறிவாளித்தனமாக எதிர்வினையாற்ற வேண்டும்.
உதாரணமாக, இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளின் மீது அரசாங்கம் அழுத்தங்களைத் தருகின்றபோது, மனித உரிமைகள் விடயத்தை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்கிறார். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல் கட்சிகள், அனைத்துலக ஊடகங்கள் கண்களையும் காதையும் திறந்துவைத்துக் கொண்டு பிரபாகரன் மீண்டும் மீண்டும் பின்னுகிற இந்தச் சுற்றாடலில் சிக்காமல் நிலைமைகளை ஆராய வேண்டும்.
நம்முன் உள்ள ஒரே வழி தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி பேச்சு மேசையில் அவர்களை உட்கார வைப்பதுதான். ஒவ்வொருவருமே இதற்காக முயற்சிக்கின்றனர். பிரபாகரனோ வெவ்வேறான உத்திகளினூடாக, அரசாங்கத்தின் மீது மீண்டும் மீண்டும் அழுத்தங்களைச் செலுத்த விரும்புகிறார். அதனூடே இராணுவ ரீதியாக வலுப்பெற நினைக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் என கண்டிப்பான ஒரு காலவரறையை வைக்க முடியாது. ஆனால் அதனை எப்படிச் செயற்படுத்துவது என சில திட்டமிடல்களை வைத்திருக்கலாம். கிழக்கைப் பார்த்தால் மீள கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். ஆனால் அதுவல்ல இலக்கு. அந்தப் பகுதியின் மீதான நமது உரிமையை எப்படி நீட்டித்து வைப்பது என்பதும் உரிய சட்டம் ஒழுங்கை அங்கு உருவாக்கி அபிவிருத்திகளை மேற்கொள்வதும்தான் முக்கியமானது. அங்கு அரசியல் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அபிவிருத்திகளைத் தொடங்க தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நமது முழு கட்டுப்பாட்டில் அது உள்ளதாக பார்க்க முடியும். அங்கு தேர்தல் நடத்துவது என்பது அரசியல் முடிவு. அது தொடர்பில் கருத்து கூற முடியாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னர் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, மட்டக்களப்பு மற்றும் வவுனியா என பரவியிருந்தனர். இராணுவத் தளபதிகளும் தங்களது இராணுவத்தினரை உத்திப்பூர்வமாக நகர்த்தினர். பல உத்திகள் உள்ளன. வன்னியை எடுத்துக் கொண்டால் தளபதிகள் வித்தியாசமான உத்தியைக் கையாளுவர். ஏற்கெனவே அவர்கள் கையாண்டதில் நம்பிக்கையிருப்பதால் அதனையே கையாளுகின்றனர்.
நமது இராணுவத்தினர் மீது எமக்கு முழு நம்பிக்கை உள்ளது. சந்தேகம் எதுவுமே இல்லை. அவர்களும் நம்பிக்கையோடு உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் இராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. கிழக்கைக் கைப்பற்றியுள்ளனர். வடக்கை கைப்பற்றியுள்ளனர். வன்னியில் மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். திட்டமிட்டபடி சரியாக செய்து வருகின்றனர்.
ஒரு பயங்கரவாத இயக்கம் 30 ஆண்டுகாலம் போராடி வருகிறது. அந்த இயக்கத்துக்கு ஆயுதங்கள் பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு ஒரு சரியான தொடர் வலைப்பின்னல் உள்ளது. 30 ஆண்டுகளாக நீடித்திருக்கும் ஒரு பயங்கரவாத இயக்கத்துடன் நாம் போரிட்டு வருகிறோம்.
வன்னிச் சமரில் அழிவு ஏதும் நமக்கு ஏற்படவில்லை. நாம் மீண்டும் வெற்றியீட்டியுள்ளோம். வன்னியில் நிலங்களை மீட்பது நமது நோக்கமும் அல்ல. விடுதலைப் புலிகளுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்த வேண்டும். எதற்காக வன்னிச் சமரில் அழிவு ஏற்பட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள் எனத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பாரிய இழப்புகளுக்கு நாம் காரணமாக இருந்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக நமது இலக்கான அவர்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.
வன்னியில் மோர்ட்டார் குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததில்தான் ஆயுதக் களஞ்சியம் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது.
தற்போதைய நிலையிலிருந்து 11 கிலோ மீற்றர் முன்னால் நாம் உள்ளோம். முன்னரங்க நிலையிலிருந்து குறிப்பிட்ட பிரிவினர் வந்திருக்கின்றனர். அதற்காக இழந்துவிட்டோம் என்பது அல்ல. அது ஒரு உத்தி.
உண்மையில் வன்னியை கைப்பற்றுவதில் விருப்பம் இல்லை. அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. நாம் விடுதலைப் புலிகளின் பலத்தை போராளிகளை- சொத்துகளை- தளங்களை பலவீனப்படுத்த வேண்டும். அதனைத்தான் வன்னியில் நாம் செய்திருக்கிறோம்.
உண்மையான நிலைமையைப் புரிந்து கொள்ளாமலும் தளபதிகளின் திட்டங்களை அறிந்துகொள்ளாமலும் மக்களுக்குத் தவறான தகவல்களை சில ஆய்வாளர்கள் தருகின்றனர். அரச தலைவரின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தனிப்பட்ட விடயமாக நினைக்கக் கூடாது. நாட்டின் பிரச்சனையாகத்தான் கருத வேண்டும். பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க நாடு ஒத்துழைக்க ஏண்டும். பயங்கரவாதத்தைத் தோற்கடித்து விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ஒவ்வொருவரும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற அரசியல் உள்ளிட்ட இதர கருத்து மாறுபாடுகள் இருக்கலாம்- பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டில் அமைதியை நிலைநிறுத்த மக்கள் ஆதரிக்க வேண்டும்.
வடக்கில் போர் நடத்த இராணுவத்துக்கு விருப்பம் இல்லை என்று அண்மையில் இராணுவத் தளபதி கூறியிருந்தார். நானும் அதனைத்தான் கூறுகிறேன். அதற்கு அர்த்தம் என்னவெனில் நிலங்களைக் கைப்பற்றுவதில் இராணுவத்துக்கு விருப்பம் இல்லை. புலிகளை பலவீனப்படுத்தவே விருப்பம். அவர்களை பேச்சு மேசைக்குக் கொண்டு வர வேண்டும்.
5 மிக் 29 வானூர்திகளுக்காக 75 மில்லியன் டொலரை சிறிலங்கா அரசாங்கம் செலவு செய்துள்ளதாக எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்? வான் படையின் தேவை என்னவோ வான் படையின் பாதுகாப்பு என்னவோ அதனடிப்படையிலே கொள்வனவை இறுதி செய்வோம்.
கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விடயம் ஒட்டுமொத்தமாகவே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. உண்மை நிலைமையை வெளிப்படுத்த நாங்கள் தவறியிருக்கக் கூடும். எந்த ஒரு செயற்பாட்டையும் நீதிமன்றின் முன்பாக விவாதித்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்துக்கும் காவல்துறைக்கும் உதவுகிறேன். அது ஒரு குற்றமெனில் அதனையே நான் செய்வேன். அதற்கு அப்பால் வேறு எந்த ஒரு குற்றமும் நான் செய்யவில்லை. ஆனால் ஏன் என்னை எல்லோரும் தாக்குகின்றனர் எனப் புரியவில்லை.
விடுதலைப் புலிகள் என்னைக் கொல்லப் பார்க்கின்றனர். உளவுத்துறையின் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகள் முதல் இலக்கு நான் தான். இப்போது அரசியல்வாதிகளும் என்னை இலக்கு வைத்துள்ளனர். ஏன் என்றுதான் தெரியவில்லை. ஆனால் மக்கள் என்னை ஆதரிக்கின்றனர். மின் அஞ்சல்கள் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நான் மிகவும் நேர்மையான மனிதன். இராணுவத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது எனது இலக்குகளில் ஒன்று. ஆயுதக் கொள்வனவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் ஆயுதக் கொள்வனவு வெளிப்படையானதுதான் என்பதை உறுதியாக என்னால் கூறமுடியும். இடைத்தரகர் இல்லாமல் - மூன்றாம் நபர் இல்லாமல் அரசாங்க நிறுவனமே ஆயுதக் கொள்வவு செய்து வருகிறது.
யாரேனும் ஒருவர் நான் இந்த ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தங்களின் மூலமாக ஒரே ஒரு ரெட் செண்ட் பெற்றதாக நிரூபித்தாலும் பதவி விலகுதல் மட்டுமல்ல. வாழ்வதற்கும் நான் விரும்பவில்லை. நான் மிகவும் கௌரவமான மனிதன். எவர் வேண்டுமானாலும் விருப்பபட்டால் விசாரணை செய்து கொள்ளட்டும். நான் மிகவும் மத நம்பிக்கை கொண்டவன். கர்மா மீது எனக்கு நம்பிக்கை உண்டு.
நான் ஐக்கிய நாடுகள் சபையை குற்றம்சாட்டியதாகக் கூறுவது தவறு. 30 ஆண்டுகளாக செயற்படும் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். உள்ளுர் சக்திகள் மூலம் அனைத்து இடங்களிலும் விடுதலைப் புலிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை இதுவிடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றுதான் கூறினேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளைக் கையாளுவதைப் போல் எங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் கையாளக்கூடாது.
விடுதலைப் புலிகள்- பயங்கரவாத இயக்கம். நாங்கள் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் எங்களுக்குத்தான் அவர்கள் உதவ வேண்டும். அந்த பயங்கரவாதத்தின் ஆணிவேரை அகற்ற எங்களுக்கு உதவ வேண்டும். அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் குற்றம்சாட்டும் சமநிலையைக் கையாளக் கூடாது.
அதேபோல் கொழும்பு கடத்தல்களை ஒப்புக்கொண்டதாக நான் கூறிய விடயத்திலும் உண்மை ஏதும் இல்லை. கடத்தல் சம்பவங்களை நான் எதிர்க்கிறேன். கடத்தல்கள் என்பதும் இராணுவ நடவடிக்கைகள் என்பதும் வெவ்வேறானது. இரண்டையும் சிலர் சமமாகப் பார்க்கின்றனர்.
கடத்தல்கள் என்பது நடக்கின்றனதான். அதனால்தான் நாம் நிறுத்த முயற்சிக்கிறோம். அதே நேரத்தில் அது ஒரு மறைமுக இராணுவ நடவடிக்கை அல்ல. ரணில் தவறாக சொல்கிறார். இராணுவம் சில உளவுரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதனை கடத்தல் என்றால் அது தவறு என்றுதான் நான் கூறினேன். (What I am saying is, when the military conducts some intelligence operations and if you try to call them abductions, it is wrong).
கொழும்பில் தனிப்பட்ட இலாபங்களுக்காக நடக்கும் கடத்தல்கள் தவறானது என்று கோத்தபாய அதில் கூறியுள்ளார்.

<நன்றி புதினம்>

Monday 18 June 2007

பாம்பும் சாகாமல், கம்பும் நோகாமல் காலம் போரைப் பொத்தி வைத்திருந்தால்த்தானே துரோகிகள் காட்டுக்கு மழை!

புலிஎதிர்ப்புக்கு கலை ஆடுவதென்பது, பணத்துக்கு பத்தையும் பறக்கவிடும் மானசிகாமணிகளது தொழில்த் தர்மம்.
தன்இனத்தின் அவலங்களில் பணம்பண்ணும் வித்தை துரோகம்.
நாய்கேன் போர்த்தேங்காய் நடுவீட்டுக்குள்ளே உருட்டவா?
அந்த போர்த்தேங்காய் படும் பாடுதான் இந்த இனவிடுதலைஉணர்வு இந்த ஜென்மங்களிடம் இருந்து விலை தெரியாமல் விற்கப் படுகின்றது.
விளங்காதவர்களை விலைக்கு வாங்கும் கடைதான் துரோகம்,
பின்பு புலித்துவேசத்தின் மந்திரங்கள் ஆக ஆக்குகிறது துரோகப் பணம்.
பணத்தைக் கண்டு வாய் ஒழுக்கு விடும் ஜென்மங்களே! ஜனனாயகம் உங்கள் வாய்க்குள் பேசப்பட அது என்னபாவம் செய்ததோ?
உங்கள் நடவடிக்கைகளின் பயனால் சமூகத்தின் ஒதுக்கல்கள் ஆகிநீர்கள், இன்று வானொலிகளிலும், இணைய பதிவுகளிலும் பந்தா யாருக்கு காட்டுகிறீர்கள்?

பைத்தியக்காறன் புத்தி மற்றவனைப் பைத்தியம் என்பது போல்,
ரயாகரனுக்கு மற்றவர்களை பணத்துக்கு குப்பை கொட்டுவதாக சொல்வதில் ஒரு திருப்த்தி வைக்கோ, நெடுமாறன், சு.ப.வி போன்றவர்களை
உங்கள் புண்ணின் அரிப்பிற்க்கு இதுதான் மருந்து என்றால் நாம் என்ன செய்ய முடியும்!!!

புலித்துவேசம் விற்கும் கடையின் மலிவான விளம்பரங்கள்!

இந்த புலித்துவேசிகளுக்கு; காடைத்தனம், தாதாத்தனம், றௌடித்தனம் நிரம்பி வளிகின்ற அறாயகக் கும்பலே புலிகள் என சத்தியம் செய்கிறார்கள். ஆனால் அந்த நிர்வாகத்தால் வெளிநடத்தப் பட்ட xபுலிகளுக்கு இவர்கள் மேடையில் பொன்னாடை போர்த்தி, ஜனனாயகம் இவர்மீது கொண்ட அளப்பெரிய காதலே, புலிக்கூட்டத்துடனான உறவுமுறிவுக்கு வழிகோலி விட்டதாக ஜனனாயகத்தின் பாசமலர்கள் படம் காட்டுகிறார்கள்.
கொலைக் கூட்டத்துக்குள் இருந்து வந்த ஒருவருக்கு, உங்கள் போக்கு ஆராத்தி எடுக்க காத்திருப்பது, உங்கள் நடவடிக்கைகளின் விதையாய் இருக்கத் தகுதியானது வெறும் புலிஎதிர்ப்பா? அல்லது ஜனனாயகத்தின் பற்றுதலா காரணமாக இருக்க முடியும்.
நல்ல நடவடிக்கைகளால் புகழ் பேசப்படுபவர்களை புலித்துவேச விளம்பரங்கள் மாதிரிகளாக எடுக்கப் பட்டால் அது அழகு, தவிர சமூகத்தால் சேறுபூசப் பட்டவர்களே மாதிரிகளாக கொண்டுவரமுடியும் என்பது உங்கள் தரக்குறைவான கொள்கைக்கு அதுவே விதி.
எனவே ரயாகரன் உங்கள் பாராட்டைப் பெறும் ஜெயதேவன், குகதாசன் இவர்களைத் அறிந்திருப்பவர்களால் அறிந்திருக்கப் படாத உங்களின் கொள்கைகள் கூட அவர்கள் பேரால் மட்டுமே அசிங்கப் படப் போகிறதே.

Sunday 17 June 2007

நேர்மை, நியாயம் எதைப் பற்றியுமே கவலை கொள்ளாதது துரோகம்!

1. தமிழ்தேசத்திடம் இனப்பிரச்சினை என்ற ஒன்று உண்டா?


2. ஆம் என்றால் அதை அகிம்சையால் பெற்றுத் தரக்கூடிய பண்பான அரசியல் பாரம்பரியம் கொண்டதா சிங்களவாத அரசியல்?


3. இல்லை என்றால் புலிவாதத்தின் போராட்டத்தை உள்வாங்கி தீர்வை பெற முயற்சி செய்வதா? புலியை புறந்தள்ளிக் கொண்டு அரசாய்த் தருவதை வாங்குவது சிறந்ததா? இலை மதிப்பான தீர்வை புலியை உள்வாங்கிக் கொண்டு பெற்றபின் புலியை புறந்தள்ள நினைக்கும் நவீன முயற்சியேன் உங்களிடம் இல்லாமல் போனது. புலிகளை அதன் பிறகு கழுத்தைப் பிடித்து தள்ளுவதென்பது மிகவும் கடினம், ஆதலால் உரிமையே இல்லாமல் போனாலும் பாதகமில்லை, சிங்களவன் கரத்தோடு எமதுகரத்தையும் பலப்படுத்தி புலிகளை அழிபதொன்றே உங்கள் புலிவிரோத-தேசியத்தின் தலையாய கொள்கையா?

ரயாகரன்; நீங்கள் கூறுவது புலிகளின் பயணம் பாவம் சுமந்தது என்று, நீங்கள் நிரூபிக்க வேண்டியது புலிகளின் பயணம் பாதை தொலைத்ததா என்றே!

அவர்களை அடக்குமுறையாளர் என்கிறீர்கள், நீங்கள் நிரூபிக்க வேண்டியது மக்கள்-ஆதரவு அவர்களை அநாதையாக்கிவிட்டதா என்பதனையே!

புலிச்சமர்களின் நிலை பாவம், பரிதாபம் என்கிறீர்கள். சமபலம் என்றபேச்சுக்கே எந்த விதத்திலும் அருகதியில்லாத புலிப்படையை அதன் இருபது மடங்கு ஆளணி, ஆயுதவளம் கொண்ட ஒரு அரசால் முப்பது வருடங்களாக வெல்லப்பட முடியவில்லையே அது ஏன் என்பதை விளக்க முடியுமா உங்களால்.
நடவடிக்கை என்பது வேறு, பேச்சு என்பது வேறு, வெறும் பேச்சுக்கு எல்லாம் வென்றுவிடும் திறமை உண்டு என நீங்கள் நினைத்தால் உங்களை வரவேற்க்கக் காத்திருப்பது கீழ்ப்பாக்கமோ, அங்கோடையோதான்!!!

தமிழ்ச் சுரங்கத்தின் ஆண்டிகள் மடம் கட்டுகிறார்கள்!

தமிழ் சுரங்கத்தின் ஆண்டிகள் மடம் கட்டுகிறார்கள்!
இந்தமடத்தின் புலித்துவேசிகள் சிங்களச் செல்வாக்கின் கூடாரத்துக்குள் வாழும் புலித்துவேசிகளை மதிப்பதில்லை.
மாற்று அரசியல்-கொள்கை இல்லாத சிங்களத்தின் அரோகராக்களாம் அவர்களை.
ஒரு ஆண்டியின் பகுத்தறிவு சொல்கிறது இப்படி,
புலிப் போராட்ட வண்டிக்கு தமிழீழம் என்ற குறிக்கோள் இழுக்கும் திறனுக்கு அப்பாற்பட்ட சுமை, இந்தியா என்றவல்லாதிக்கம் அதன் பாதையின் குறுக்கே கிடக்கும் போது தமிழீழம் என்பது வெறும் கனவுதான் என்கிறது.

ரயாகரனின் கைதுக்காலம்
சிறிது வித்தியாசமானதாக இருந்தது, அவர் செய்த புண்ணியம்.
போராட்டக் புரளிகளை புலிகள் களைஎடுத்துக் கொண்டிருந்தகாலம், மக்கள் உணர்வு இந்த நடவடிக்கைகளால் ஓரளவு காயப்பட்டிருந்தது உண்மைதான். ஏன் எனில் அவர்களிடம் புலநாய்வுப்படை ஒன்று இருந்திருக்கவில்லையே முன்கூட்டியே அறிந்திட, இவர்கள் புலிகளையே களையெடுக்கும் இந்திய எஜமானியின் கட்டளையை கையில் வைத்திருந்ததை.
எனவே இவரின் கைதின் போது, வெறும் மாணவன் என்ற கோதாவே கூட்டம் சேர்திருந்தது, அவர் செயற்பாடுகளின் பின்புலம் வெளிக்குத் தெரிந்திருக்கவில்லை, புலிக்குத் தெரிந்தது போல்.
எப்படி விஜிதரனின் அரசியல் கணக்கு வளக்குகள் அம்பலபலதுக்கு வர, அந்த மாணவ சமுதாயம் தன்பாட்டில் பின்வாங்கியதோ, அவ்வாறே இவரது ஆதரவு நிலைமையும் அநாதரவாகத் தொடங்கியது.
இருந்தாலும் அப்பாவிக் கைதுகளுக்கு புலிகளின் கரங்கள் குறைசாட்டப்படவே முடியாதது, என்ற பெருமையை இன்றைய செயல்காளால் கூட நிரூபித்துக் கொண்டிருக்கும் ரயாகரன் நடவடிக்கைகளுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

ஐயா!! மக்கள் ஆதரவு புலிகளை தூக்கிவைத்திருக்கிறதா?
இல்லை மிதித்து வைத்திருக்கிறதா? என்பதை என்பதை; சிங்களமோ, புலிஎதிரிகளோ சொல்லக்கூடாது.
அது அந்த மக்களால் சொல்லப்படுவதுதான் நம்பகமானதாகும். சரி உங்கள் வாதம் புலிப்பயம் தடுக்கும், அவர்கள் நிர்வாகத்துக்குள் என்றால், அரசநிர்வாகத்தின் தேர்தல் முடிவுகளும் புலிகளையேவாரி அணைப்பதை அறியவில்லையா?
சரி அதையும் விட புலத்தில் கடல் போல் மக்கள் வெள்ளம் அவர்கள் ஆதரவை பறைஅறிவிக்கின்றதே!
எனவே உங்களால் முடிந்தால்; புலிஆதரவு என்பது இல்லை என்று முதலில் நிரூபியுங்கள், எனவே பின்பு வரும் உங்கள் புலம்பல்களாவது நம்பகத்தன்மையின் காற்றையாவது தரிசிக்கும். அதைவிடுத்து அரைத்த மாவையே அரைப்பதுபோல் சொன்ன ஒன்றையே வெறும்வாய்க்கு சப்பக் கொடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.
இப்படிக்கு பேச்சிலும் நாகரீகத்தை மதிக்கும்,
தேவன்.

Thursday 7 June 2007

உறங்குநிலையில் இருந்து மீளும் தமிழ்துவேசம்

புலிப்பகையை தனித்து நின்று வெல்லமுடியாது என்ற நிலைமையால் உறங்குநிலையில் வைத்துக் கட்டிக் காக்கப்பட்ட தமிழ்துவேசம் மெதுவாக உயிர்ப்படைகிறது.

கொழும்புத்தமிழர்களின் விரட்டியடிப்பானது, சிங்கள அரசு உலகத்தின் முன் தன் நடுநிலைவேசத்தை தானாகவே கலைக்கத்துணிந்துவிட்டதன் முதற்படி இதுவாகும்.

மக்கள் மனங்களிலேயுள்ள புலிஆதரவுத்தனத்துக்கு எதிரொலியாக, அவர்கள் மனங்களிலே கனன்று கொண்டிருக்கும் பழிவாங்கும் வெறி புலித்தாக்குதலின் பின்னடைவுகளால் நெய்யூற்றப்பட்டு வளர்ந்து எரிகிறது. எனவே இந்த கையாலாகத்தனங்களின் போர் நடவடிக்கைகள் இனிமேல் அப்பாவி இலக்குகள் மீது வெளிக் கண்டனங்களையும் பொருட்படுத்தாது படைஎடுக்கப் போகின்றது.

கொழும்புத்தமிழர் விரட்டிஅடிப்பு சிங்களவாத மனித உரிமை மீறல்களின் புதிய பரிமாணம்!

மகிந்தவின் கொழும்பு நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் கண்டனம்
[வெள்ளிக்கிழமை, 8 யூன் 2007, 10:31 ஈழம்] [செ.விசுவநாதன்]
தமிழ் மக்களை சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றிய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசாங்கத்தால் கொழும்பு நகரில் வசித்து வந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வடக்கு - கிழக்குப் பகுதிக்கு திருப்பி அனுப்பியமையானது இனப்படுகொலையின் மற்றொரு செயற்திட்டமும் பாரிய மனித உரிமை மீறலுமாகும். கடந்த அரை நூற்றாண்டுகாலமாக சிறிலங்கா அரசாங்கங்களால் தமிழ் மக்கள் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு அனைத்துலக சமூகம் குரல் கொடுத்து வரும் நிலையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இலங்கைத் தீவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி இலங்கையில் விவாதித்துக் கொண்டிருக்கும்போது இத்தகைய செயற்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை அனைத்துலக சமூகம் புரிந்திருக்கும்.
நோயாளர்கள், இளையோர் மற்றும் முதியோரை கொடூரமாக தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றியிருக்கும் இந்த பாரிய மனித உரிமை மீறலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<புதினம்>

Tuesday 5 June 2007

பகுத்தறிவுக்கு விற்காத ரயாகரனின் புலித்துவேசம்

உங்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிண்ற புலித்துவேசம் உங்கள் சொந்தப் பகையின் விழைச்சலா, இல்லை தேசமுன்னேற ஈடுபாட்டு உணர்வின் விழைச்சலா?

அங்கு நிகழும் ஒவ்வொரு மனித அவலங்களைய்யும் புலிக்கெதிராக சோடினை செய்யவே உங்கள் மொத்த சக்தியும் செலவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதால், உங்கள் புலித்துவேசக் கொள்கைக்கு மக்கள் நலன் என்பது வெறும் காதில்குத்திக் கொள்வது மட்டும்தான்.
ரஞ்சன்வியயரட்ணா என்ற சிங்கள முன்னாள் இராணுவத்தளபதி அந்தப் பதவிக்கு குடிபுகுந்த நாட்ககளில் கூறி இருந்தார் இப்படி. "எமது இராணுவத்தின் கம்பீர அணிவகுப்பைப் ஒருமுறை பார்த்தாலே புலிப்பய்லுகளுக்கு மூத்திரம் இறைக்கும்". இதை கூறும் போது அவர் பகுத்தறிவு எட்டிக்கூட் ஒருக்கால் அவரைப் பார்க்கவில்லைப் போல் தெரிகிறது. ஏன் என்றால் இருபத்திஐந்து வருடங்களாக அந்தப் பயல்களால் தண்ணிகாட்டப் பட்டுக் கொண்டிருக்கும் படை யாருடையது?

புலிகளைப் பிடிப்பதும், பிடிக்காததும் அல்ல இப்போதய விடையம், பிடிக்கவில்லை என்றால் அவர்களது அறிவு அடிமட்டத் தரத்துக்கா தாழ்ந்துவிட வேண்டும்.

எந்த ஒரு நாட்டினது தயவும் இன்றி பலவல்லரசுகளின் கொழுத்தவளங்களின் துணையோடு வருகின்ற அரசஎதிரியை, எதிர்த்து தம் இருப்பை முப்பது வருடங்களாக தக்கவைத்திருக்கின்ற ஒரு அமைப்பை, ஒரு கிள்ளுக்கீரை தரத்துக்கு வர்ணிப்பது உங்கள் ஆத்மாவின் திருப்திப்பசிக்காகவா? பகுத்தறிவுகளுக்கு இவை விலைப்படவேண்டுமே என்ற எண்ணம் கொஞ்சமேனும் இருப்பதில்லையா?


புலிப்போராட்டத்தின் பசி பணமா?, அதிகாரப்போதையா?
கடந்தகாலங்களில் நான் ஒருசாராருடன் போராட்டம் சார்ந்த பேச்சில் இறங்கும் போது, அவர்கள் எனக்கே பூச்சாண்டி காட்டுவார்கள் இது அந்த அமைப்பில் உள்ளவர்களின் வசதியான வாழ்வுக்கான ஆதாரம் என்று, ஒருவேளை இந்த கையாலாகாத்தனங்களின் வன்மையான வாய்ப்பேச்சு என்னை மூளைச்சலவை செய்துகூட இருக்கும்,

இந்த சம்பவம் நிகழ்ந்திராவிட்டால்.
இந்திய இராணுவம் எம்மண்ணில் கால் பதித்தபோது எம் எதிர்பார்ப்புக்கள் அனைத்துக்கும் குழிதோண்டப் பட்டுவிட்டது தன் தேசியநல வியாபரப் பேரம்பேசலுக்கு எமக்குகிடைக்கவேண்டிய உரிமைகள் ஒவ்வொன்றாய் செலவு செய்யப்பட்டது. வல்லரசு மமதைக்கு புலிகளுக்கு கணக்குகாட்டவேண்டுமே என்று தோன்றவே இல்லை. மரணத்தை கழுத்தில் கட்டிக் கொண்டு திரிபவனுக்கு வசதிகளை ஆசைகாட்டி வழிப்படுத்த முனைந்தனர்,

கொட்டிய இரத்தத்தின் ஈரம் ஆறமுதலே போராட்டத்துக்கு சவப்பெட்டி அடிதது இந்தியா,

அந்த நேரம் தலைவன் போர் என்று முடிவை எடுத்தபோது, அதன்முடிவும் வெளிச்சமாகவும் மிகத்தெளிவாகவும் தெரிந்திருக்கும் தலைவனுக்கு, எனவே சாவென்ற நெருப்புக்குள் தீக்குளித்து சோரம்போகாத கொள்கை உறுதியையும், அடிமைப் படுத்தப்பட முடியாத தன்மானாத்தையும் உலகுக்குத் தரவந்த ஒரே அமைப்பு எமது போராட்டம்தான்.
எனவே இந்தப் பரீட்சையிலேயே வெற்றி அடைந்தவர்களை உங்கள் வக்கிரமன ஆசைகளுக்காக தரம் தாழ்த்தலாமா?

நான் அந்த நிர்வாகத்துக்குள் வளர்ந்த பாதிப்பே எனக்குள் புலிமரியாதையை கோபுரம்போல் வளர்த்தது பெரியார்சிந்தனைகள் என்னைச்செய்த பக்குவமே அதற்க்கு அடிப்படையாய் இருந்திருக்கும் எனநினக்கிறேன்.

மக்களாதரவு புலிகளை சீராட்டுகிறதா? இல்லை எட்டி உதைக்கிறதா? உங்கள் எதிர்வுகூறல் புராணங்கள் எல்லாம் தினமின தரத்தில் நம்பகத்தன்மைக்கு பிச்சை எடுக்கும் போது இங்கே அலசி ஆராயவேண்டிய தேவை ஒன்றுமில்லை இருப்பினும் உண்மைகளைக் காட்சிப்படுத்துவதற்கு திறமையும் தேவை இல்லை, கடுமுயற்சியும் தேவை இல்லை என்பதால் கூற வருகிறேன், வெறும் சிலநூறு புலிகள் காட்டுக்குள் அநாதைகளாக்கப் பட்டனர் இந்தியவல்லரசால் மிகச்சிறிய அளவான புலித்துவேசம் மக்கள் மத்தியில் இருந்திருந்தாலே புலிகள் இல்லாமல் ஆக்கப் பட்டிருக்க முடியும், ஆனால் அவ்வாறு இல்லாமல் பெரும் வைத்தியசாலைகள், பெரும் சந்தைகள் என்று மக்கள் பெரும் தொகையாக இராணுவ அட்டூளியத்தால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையின் தம் உயிரைப் பணையம் வைத்து வாழவைத்த போராட்டத்துக்கு, மக்களாதரவு இல்லை என்பது பகுத்தறிவுக்குச் செல்லாத பேச்சுக்கள் அல்லவா?

நான் மதநம்பிக்கை இல்லாதவன், ஆனால் எந்த ஒரு மதநம்பிக்கையையும் இம்சைசெய்யும் விதத்தில் விவாதிப்பதை ஏற்றுக்கொள்வதில்லை அது அந்தசாராரின் உணர்வுகளுக்கு கொடுக்கப்படும் மதிப்பு. ஆனால் உங்கள் வார்தைகள் சபை ஏறும் தகுதி அலாத அசிங்கம் கொண்டவை. அவற்றால் தான் புலிஎதிர்புக்கு அர்சனை செய்யமுடியும் என்ற கருதியல் வறுமையை நினைக்கும் போது, குருடன் கோபம் சுவரோடு தலை மோதுவதைப் போன்ற பரிதாபத்துக் குரியதாகவே இருக்கிறது.

புலிஆதரவு பணத்தால வாங்கப்படுகிறதா? அவை எந்த அரசுகளால் சீராட்டப்படுகிறது புலிஎதிர்ப்புக்குத்தான் பல வல்லரசுகள் தோள் தருகிறார்கள், தன்சொந்த மக்களின் வியர்வையிலேயே வளருகின்ற அமைப்பை இப்படி அடிமட்டத்தனமான பொய்களைச் சொல்லி அற்பத்தனமான சந்தோசங்களில் உங்களை நீங்களே ஏமாற்றப் பழக்கப்பட்டு விட்டீர்கள்.


அப்பாவி இரத்தங்களோடு அரசபோர்த்தந்திரம்

குடாநாட்டில் ஆயுதபாணிகள் அட்டகாசம் 4 பொது மக்கள் சுட்டுக் கொலை
[05 - June - 2007] [Font Size - A - A - A]
யாழ்.குடா நாட்டில் நேற்று திங்கட்கிழமையும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் தபாலதிபர் ஒருவர் மற்றும் இரு சகோதரர்கள் உட்பட நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை சாவகச்சேரியில் தபாலதிபரும் நேற்று நண்பகல் யாழ்நகரில் மூன்று இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் சாவகச்சேரி வங்களாவடி வீதியில் சென்று கொண்டிருக்கையிலேயே தபாலதிபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளொன்றில் இவர்களைப் பின் தொடர்ந்து வந்த ஆயுத பாணிகளே, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தபாலதிபருக்கு அருகில் வந்து அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதனால் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சங்கத்தானையில் வசித்துவந்த தபாலதிபரான சுப்ரமணியம் சாந்தீபன் (வயது 30) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
இவரது உடல், சம்பவம் நடைபெற்ற நேரத்திலிருந்து நேற்று நண்பகல் 12 மணி வரை அந்த இடத்திலேயே கிடந்துள்ளது.
இதேநேரம், நேற்று நண்பகல் 12 மணியளவில் யாழ்நகரில் கோயில் வீதியில் ஆயுத பாணிகளால் மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கோயில் வீதியில் ஐ.நா. அலுவலகத்திற்கும் பல சர்வதேச அரசசார்பற்ற அலுவலகங்களுக்குமிடையில் நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் தலைக் கவசங்கள் அணிந்து வந்த ஆயுதபாணிகள், அவ்வீதியால் மோட்டார் சைக்கிளொன்றில் வந்து கொண்டிருந்தவர்கள் மீதும் சைக்கிளொன்றில் சென்று கொண்டிருந்தவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதனால் மூன்று இளைஞர்கள் அந்த இடத்திலேயே வீழ்ந்து துடிதுடித்து இறந்துள்ளனர். இதில் இருவர் சகோதரர்களென அடையாள அட்டைகள் மூலம் தெரியவந்தது.
ஆயுதபாணிகள் கண்டபடி சுட்டபோது அவ்வீதியால் வேறுபலரும் சைக்கிளில் வந்துகொண்டிருந்ததாகவும் எனினும் அவர்கள் நிலத்தில் குதித்து தரையில் வீழ்ந்து தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பும் இராணுவ காவலரண்களுமுள்ள கோயில் வீதியிலேயே இந்த மூன்று இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஆயுத பாணிகள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் இலகுவாக தப்பிச் சென்றுள்ளனர்.
கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களதும் சட்டைப் பொக்கற்றுகளினுள்ளிருந்த அடையாள அட்டைகளின் படி, கச்சேரி- நல்லூர் வீதியைச் சேர்ந்த சோதிராஜா நிஷாந்தன் (27 வயது), சோதிராஜா தர்ஷன் (21 வயது) மற்றும் கட்டப்பிராய் வேளாந்தோப்பைச் சேர்ந்த சந்திரகாந்தன் சந்துரு (21 வயது) எனத் தெரியவந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக குடாநாட்டில் படுகொலைகள் குறைந்திருந்த நிலையில், இக்கொலைகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டதாக மக்கள் பெரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.


தினக்குரல்

இராணுவ படைத்தளங்கள் புலிகள் பகுதிகளுக்கு ஏவும் செல்மழை

குடாநாட்டில் படைத்தளங்களிலிருந்து புலிகளின் பகுதி மீது கடும் ஷெல் தாக்குதல்
[05 - June - 2007] [Font Size - A - A - A]
யாழ். குடாநாட்டில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை மிக உக்கிரமான ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெற்றுள்ளது.
பலாலி, வடமராட்சி கிழக்கு மற்றும் தென்மராட்சி படைத்தளங்களிலிருந்தே இந்த அகோர ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெற்றுள்ளன.
மாலை 5 மணியளவில் ஆரம்பமான இந்தத்தாக்குதல் நள்ளிரவு 11.30 மணிவரை தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முகமாலை, பளை, இயக்கச்சி மற்றும் பூநகரிப் பகுதி நோக்கியும் வடமராட்சி கிழக்கு நோக்கியுமே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதனால் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளும் நீண்ட நேரம் பெரிதும் அதிர்ந்து கொண்டிருந்தன.
இவ்வேளையில் படை முகாம்களிலிருந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதே நேரம், ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை முதல் பருத்தித்துறை
வரையிலான கடற்பரப்பில் மீன் பிடிக்க எவரும் அனுமதிக்கப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலை மேற்படி கடற்பரப்பில் மீன் பிடிக்கச் செல்வதற்காக மீனவர்கள் கடற்கரைக்குச் சென்றபோது அவர்களைப் படையினர் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தினக்குரல்

தமிழ்ப் பிரதிநிதிகளையும்' ம,உ பேச்சாளர் செல்வி

தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் அழைத்திருக்க வேண்டும்: மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி
[செவ்வாய்க்கிழமை, 5 யூன் 2007, 08:00 ஈழம்] [பா.பார்த்தீபன்]
ஆழிப்பேரலை அனர்த்தத்துக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்குழுவின் கூட்டம் தொடர்பாக கவனத்தைச் செலுத்தியிருக்கும், விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், தமிழ்ப் பிரதிநிதிகள் பங்குகொள்ளாத இது போன்ற கூட்டமொன்று பயனுள்ளதாகவோ முழுமையானதாகவோ இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்றது.
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் ஒன்றுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்திக்குழு அழைத்திருக்க வேண்டும் என இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி, கடுமையான மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டு, அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களையும் மீறிவரும் சிறிலங்கா அரசாங்கம் தமது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக இதற்கு அழைக்கப்பட்டிருக்கின்ற அதேவேளையில், பாதிக்கப்பட்டவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளுக்குத் தன்னுடைய ஆதரவை வழங்கியதுடன், களநிலைமைகளின் யதார்த்தங்களையும் அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியம், ஆழிப்பேரலைக்குப் பின்னரான நிலைமைகளையும், மனித உரிமைகள் நிலவரத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமானால் எதிர்காலத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளையும் அழைப்பது அவசியமாகும்.
ஆழிப்பேரலையால் தாக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஆழிப்பேரலைக்குப் பின்னரான திட்டங்களில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். 40,000 பேர் கொல்லப்பட்ட அதேவேளையில், 6,00,000 பேர் தமது வாழ்வாதாரங்களை இழந்து அகதிகளானார்கள்.
பல்வேறு அமைப்புக்களும், உள்ளுர் தலைவர்களும் இந்த இடம்பெயர்ந்தவர்களினதும் மற்றும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களினதும் துன்பங்கள் தொடர்பாகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்கள்.
வடபகுதியில் 3,50,000-க்கும் அதிகமானவர்கள் வடபகுதியிலுள்ள முகாம்களில் தொடர்தும் இருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா படையினர் முன்னெடுத்துவரும் தாக்குதல்கள் காரணமாக அங்குள்ள இடம்பெயர்ந்தவர்கள் யுத்த நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அனைத்துலக கண்காணிப்பின் மூலமாகவே மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும், மனிதாபிமானச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்திருக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகப்பு மின்னஞ்சல் உங்கள் கருத்து அச்சுப் பிரதி

புதினம்