புலிஎதிர்ப்பை புல்லரிக்கவைக்கும் ரயாகரனுக்கு வணக்கம்!
இந்தியத்தின் அராயகம் ஈழத்தில் ஜென்மாந்திர சிறைவாச தோசம் கொண்டவர்களை அள்ளி எடுத்து, தமிழர்களுக்கு அரசியல் போதிமரங்களாக ஆக்க முயற்சி எடுத்தது.
அந்த முயற்சியில் வேர்விட்டதா இந்த ரயாகரம்?
தமிழீழம் என்ற சிந்தனையை தன் பகைகளில் ஒன்றாக கருதக் தக்க சக்தியின் அதன் கொள்கைகளால் கற்பம் தரிக்கப் பட்ட போராட்ட
முன்னாள் போராளிக் குழுக்களின் போராட்ட அகாலமரணங்களுக்கு நினைவஞ்சலி பாடவந்த கவியோ?
காலம் காணாத எம்மண்ணின் கல்வி அறிவோ?
பெரும்பான்மையின் விருப்பத்துக்கு பாதை அமைப்பதே பகுத்தறிவின் சட்டம்.
எங்கே உங்கள் வாதம் பெரும்பான்மைக் குரலுக்கு சொந்தம் என்று சொல்ல செயல்களால் முடியுமா?
வாய்வார்த்தைக்கு "குளத்தைக் கடல்" என்றும் சொல்ல முடியும்,
சந்திரிக்கா கூட "தமிழ் மக்கள் என்பக்கம் தான்" என்றும் சொல்ல முடியும்.
பகுத்தறிவு என்றால் என்ன? லங்காபுவத்திடம் அறிவை இரவல் வாங்கி புலிப்பலத்தை நகையாடுவதா?
ஜந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் புதுமுகங்களுக்கு, புதுக்கதைகள் சொல்லுகின்றமை வழமை. அடுத ஆட்சியில் அவர்கள் குட்டிச்சுவரில் காதிதம் தான் தின்று கொண்டிருப்பார்கள் என்பதும் சிங்கள அரசியலின் பரப்பரைத்தோசம்.
இதேபாணியிலேயே தாங்கள் கூட கரைந்து கொண்டிருப்பது பற்களே தேயும் வரைக்குமா? என்ற சலிப்பேதும் வருவதில்லையா?
புலத்திலே புலிஆதரவு கடல் போல் திரண்டு காலத்துக்கு உண்மையைக் காட்டுவது போல்,
எங்கே சிறு குட்டை அளவுக்காவது திரள உங்கள் கருத்துக்களுக்கு கூட்டம் உண்டா?
இல்லை பகுத்தறிவுத் திரவியம் பொங்கிவளியும் ஒரே நிறைகுடம் நீங்கள் தானா எமக்குள்?
சுவையை அறிவிக்கும் உணர்வுகள் நாவில் செத்த பிறகு ஒருவன் உணவு உண்பது அவன் உடம்பின் வாழ்வுக்கு மட்டும்தான்.
அவ்வாறே சில யென்மங்களின் பணப்பேராசை இவர்கள் மனித உணர்வுகளை சாவடித்து விடுகிறது, எங்கே உங்கள் அறியாமைக்கு கொஞ்சமாவது வெளிச்சம் காட்ட நாம் ஆசைப் படுகின்றோம் ரயாகரன்.
கண்களை விற்று சித்திரம் வாங்க ஆசைப் படாதீர்கள்!
Tuesday 31 July 2007
Saturday 14 July 2007
நோய்ப் பிரியன் பக்கத்தில் புத்தகங்கள் பார்த்தேன்!
புண்ணின் சொறி கூட சுகமாய்த்தான் இருக்கும்; சொறியச், சொறிய,
ரயாகரனிசத்தின் புத்திக்கு அது ஒன்றேதான் சுகத்துக்கு மிச்சமாய் இருப்பது வருந்தத் தக்கதே!
ஈழத்து மக்களின் துன்பங்களுக்கு யார் உண்மையான பாதுகாவலன்?
புலிகளா? இல்லையே அந்த பாசிசவாதம்தானே அதன் நோய் மூலமே!
சிங்களவாதமா? விபச்சார அரசியலின் கூத்தாடிகள் அல்லவா அவர்கள்!
சிங்கள அரசின் தத்தெடுப்பு தமிழ் குழுக்களா? வீட்டைக் கொழுத்தும் அரசவாதத்துக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் பிசாசுகள் அல்லவா அவர்கள்?
அப்படி என்றால் இவர் தயாரிக்கும் திரைப்படக் கதையின் நாயகனுக்கு இவர் கற்பனையைப் பிழிந்துதான் உருவம் படைக்க வேண்டுமா?
அனைத்து தரப்பையும் வில்லன்களாகவே பார்க்கின்றார் என்றால்,
புலிஎன்ற வில்லன்கள் குறித்து, அரசு என்ற வில்லன்கள் கழிந்து விடுகின்ற அண்டப் புளுகுகளை எல்லாம், முழங்காலை முட்டுவைத்து முழம்நாக்கால் நக்கி எடுத்து அவற்றை அக்கறை யோடு தனது செய்திச் சேவையில் முழங்குகிறாரே!
தழிழர்தரப்பின் உரிமைகளை, சிங்களதரப்பின் அதிகாரம் கை நழுவவிடாமல் இருப்பதன் காரணம், புலிகளின் பயங்கரவாதப் போக்குத்தான் என்றால், அது மாற்றுக் குறையாத பைத்தியக் காறத்தனத்தின் பேச்சல்லவா?
புலிக்காச்சலில் சிங்களவாதம் புலிஎதிர்ப்பாய் என்னத்தை பிதற்றிக் கொண்டிருக்கின்றதோ,
அதன் தராதரத்திலேயே ரயாகரனின் பிதற்றல்களும் சமமாய் உக்காருவதால், இவர் வாயாலேயே சிங்கள வாதத்தை இளக்காரம் பண்ணிக்கொண்டு எப்படி புலி எதிர்ப்புக்கு கனவு காண மட்டும் அவர்கள் சிந்தனையையே இரவல் வாங்கலாம். இதுதான் முதிர்ச்சி உடைய பகுத்தறிவா?
இல்லை இகழ்ச்சிக்கு பயந்த பிழைப்புவாதமா?
பெரும் படைபலம் கொண்ட வல்லரசாலேயே, கிள்ளி எறிய முடியாத போராட்டம் என்றால் அது மக்கள் ஆதரவு என்ற வேரில் இல்லாமலா இருந்திருக்கும்.
"மக்கள் ஆதரவு புலிகளுக்கு இல்லை."
"புலிகள் ஆயுதங்களைப் போட்டால் அவர்களை, அவர்களின் முன்னாளின் வவ்வால் பாவங்கள் எல்லாம் பழிதீர்க்க கிழம்பிவிடும்"
இப்படி தினமின பொறாமைப் படும்படி கனவுகாணுவது,
அதிமேதாவித்தனத்தின் ஞானப்பார்வையினாலா? இல்லை புலித்துவேசத்தின் பித்தப்பார்வையினாலா?
இந்தப் பித்தப்பார்வையை வைத்து புத்தகம் வேறு எழுதுகிறாரம்.
முதலில் உங்கள் பார்வையைக் குணப்படுத்த வழியைப் பாருங்கள், விடுத்து எங்கள் பார்வைக்கும் காமாளையைத் தர ஆசைப் படாதீர்கள்.
ரயாகரனிசத்தின் புத்திக்கு அது ஒன்றேதான் சுகத்துக்கு மிச்சமாய் இருப்பது வருந்தத் தக்கதே!
ஈழத்து மக்களின் துன்பங்களுக்கு யார் உண்மையான பாதுகாவலன்?
புலிகளா? இல்லையே அந்த பாசிசவாதம்தானே அதன் நோய் மூலமே!
சிங்களவாதமா? விபச்சார அரசியலின் கூத்தாடிகள் அல்லவா அவர்கள்!
சிங்கள அரசின் தத்தெடுப்பு தமிழ் குழுக்களா? வீட்டைக் கொழுத்தும் அரசவாதத்துக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் பிசாசுகள் அல்லவா அவர்கள்?
அப்படி என்றால் இவர் தயாரிக்கும் திரைப்படக் கதையின் நாயகனுக்கு இவர் கற்பனையைப் பிழிந்துதான் உருவம் படைக்க வேண்டுமா?
அனைத்து தரப்பையும் வில்லன்களாகவே பார்க்கின்றார் என்றால்,
புலிஎன்ற வில்லன்கள் குறித்து, அரசு என்ற வில்லன்கள் கழிந்து விடுகின்ற அண்டப் புளுகுகளை எல்லாம், முழங்காலை முட்டுவைத்து முழம்நாக்கால் நக்கி எடுத்து அவற்றை அக்கறை யோடு தனது செய்திச் சேவையில் முழங்குகிறாரே!
தழிழர்தரப்பின் உரிமைகளை, சிங்களதரப்பின் அதிகாரம் கை நழுவவிடாமல் இருப்பதன் காரணம், புலிகளின் பயங்கரவாதப் போக்குத்தான் என்றால், அது மாற்றுக் குறையாத பைத்தியக் காறத்தனத்தின் பேச்சல்லவா?
புலிக்காச்சலில் சிங்களவாதம் புலிஎதிர்ப்பாய் என்னத்தை பிதற்றிக் கொண்டிருக்கின்றதோ,
அதன் தராதரத்திலேயே ரயாகரனின் பிதற்றல்களும் சமமாய் உக்காருவதால், இவர் வாயாலேயே சிங்கள வாதத்தை இளக்காரம் பண்ணிக்கொண்டு எப்படி புலி எதிர்ப்புக்கு கனவு காண மட்டும் அவர்கள் சிந்தனையையே இரவல் வாங்கலாம். இதுதான் முதிர்ச்சி உடைய பகுத்தறிவா?
இல்லை இகழ்ச்சிக்கு பயந்த பிழைப்புவாதமா?
பெரும் படைபலம் கொண்ட வல்லரசாலேயே, கிள்ளி எறிய முடியாத போராட்டம் என்றால் அது மக்கள் ஆதரவு என்ற வேரில் இல்லாமலா இருந்திருக்கும்.
"மக்கள் ஆதரவு புலிகளுக்கு இல்லை."
"புலிகள் ஆயுதங்களைப் போட்டால் அவர்களை, அவர்களின் முன்னாளின் வவ்வால் பாவங்கள் எல்லாம் பழிதீர்க்க கிழம்பிவிடும்"
இப்படி தினமின பொறாமைப் படும்படி கனவுகாணுவது,
அதிமேதாவித்தனத்தின் ஞானப்பார்வையினாலா? இல்லை புலித்துவேசத்தின் பித்தப்பார்வையினாலா?
இந்தப் பித்தப்பார்வையை வைத்து புத்தகம் வேறு எழுதுகிறாரம்.
முதலில் உங்கள் பார்வையைக் குணப்படுத்த வழியைப் பாருங்கள், விடுத்து எங்கள் பார்வைக்கும் காமாளையைத் தர ஆசைப் படாதீர்கள்.
Subscribe to:
Posts (Atom)