Friday 31 August 2007

இயலாமையின் சமாதானம்

தன் அநுமானப் பார்வை காலம் நம்பும் தகுதி கொண்டு இருக்க வேண்டும் என்றால் அந்த கதை தற்க்க வியலில் வெல்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
அதை விடுத்து சோதிடனின் பாணியில் தன் விருப்பத்தை சொல்லி அதை விதி என்று சாதிக்க முற்படுவதால் பலன் ஒன்றும் இல்லை.
இது வரை வந்த ரயாகரனின் எந்தப் பதிவும் மக்கள் மனங்களை வெல்லும் தகுதியில் இருந்ததே இல்லை.
தன் வயிற்றெரிச்சலை குடிவெறியில் ஆற்றுகின்ற ஒரு குடிகாறன் பேச்சின் தராதரத்திலேயே அத்தனையும் இருக்கிறது.
இவர் எழுத்தாழுமையின் உவமானங்களின் தராதரத்தைப் பாருங்கள்,
தின்பனவின் பின்வருவனவற்றாலேயே சொல்லுக்கு சொல் நாற்றமடிக்க
வைப்பார், இந்த இலட்ச்சணத்தில் பொதுவுடமைவாதம் வேறு இவர் பற்களுக்குள் அகப்பட்டு இம்சைப் படுகிறது.
சொல்லமுடியாத பாதகங்கள் எல்லாம் செய்து சிறைக்குள் வாழுகின்ற ஒருவன் பொதுவுடமைக்கு எதிரான அரசு இது என்று போங்கி எழுந்தானாம்.
ஐயா பொதுவுடமையை ஒருமுறை எழுதிடும் மையளவுக்காவது உன்னுடைய நடவடிக்கைகளில் நன்மைகள் இல்லாத போது எதற்க்கு உந்த வேசங்கள் எல்லாம்?
சிங்களம் தமிழர்கள் எல்லோரயும் புலிகள் என்று பார்ப்பது சரிஎன்று படுவதாலேயே அவர்களுக்கு தீர்ப்பாக வளங்கப் படும் அவலங்களும் சரியானதே என்று திருப்த்திப் படுகிறது.
அது போலவே உமக்கும் புலிஆதரவு என்ற பதத்தை புலிஎன்று பாவிக்கப் படுவது நியாயம் என்று படுகிறது, அதனால் தானோ விசருகள், நாய்கள், எருமைகள் போன்ற சொற்கோவைகளால் விமர்சனம் செய்யப் படுகிறார்கள் புலிஆதரவாளர்கள்.
ஐயோ பாவம் பொதுவுடமை வாதத்தின் கொள்கை!
உங்கள் கருத்துக்கு எதிர் நிலையானவரின் நிலைமையின் நியாயத்தன்மையை விளங்கிக் கொள்ள முடியாதவனுக்குத்தான் வன்முறை வெறி பிறக்கிறது எனவே கருணாகூட்டத்துக்கு தோதான குணம் உம்மிடம் இருக்கிறது ஆனால் இயலுமை பேனாதூக்க மட்டுமே தோதாகிறது.
இரண்டு திருடர்களில் மதிப்பு குறைந்த பொருள் திருடியவன் மனிதாபிமானம் பேசுகிறான் என்றால் தன் இயலாமையின் கொட்டாவிக்கு மனிதாபிமான வேசம் போடுகிறான் என்றுதான் பொருள், அதுபோல் கருணாவின் தேசத்துரோகம் பொருந்தும் அதே அச்சுக்குள் பிசகாமல் உமது துரோகங்களும் பொருந்தும்,
பணத்துக்கு இனத்தை விற்ப்பவனின் வாழ்வுக்கு, மனித சந்தோசத்தின் நிழல் அவன் ஆயுளுக்கு இல்லை. இதை உன்மரணத்தின் மடியிலாவது நீர் உணர்ந்தே ஆகவேண்டும்.