Friday 14 December 2007

ஜென்மங்கள் செருப்பால் அடித்தாலும் தொலைக்க முடியாத ஈனத்தங்கள்!

விழுந்த பனம்பழம் உண்மையான கதையாகவே இருக்க அதற்க்கு காகத்தை காரணமாக கொண்டு வந்து இருத்துவதுதான், ரயாகரன் பிழைப்புவாத எழுத்தின் உழைப்பாய் இருப்பது.
ரயாகரனிசம் கதை அளக்கின்றது இப்படி,,, “ஈழத்தில் மக்களை காலிசெய்ய வைத்தது, புலிகளின் மேல் கொண்ட வெறுப்பாம்”.

ஈழத்தில் அப்படி புலம் பெயர்ந்த மக்கள்கூடம் தானே புலம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள், அவ்வாறு அந்தந்த நாடுகளில் எழும் புலிஆதரவுப் பேர்அலைகளாக இருப்பது இந்த மக்கள் கூடமே அல்லவென்றால், யார்தான் காரணம் என்று சொல்லவருகின்றீர்?
புலி நிர்வாகப்பகுதி வாழ்மக்களில் அன்றாடத் தேவைகள் கூட மறுக்கப்படுவது யாரால்?
எரிபொருள்தடை, மின்சாரத்தடை போன்ற அடிப்படைத் தேவைகளின் தடைக்குள், தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றது தமிழினம்.
இப்படி மக்களின் வாழ்வு; சாவோடு போராடும் சூழலில் வைப்பிப்பது சிங்கள அரசு.
வாழ்வை பிழைக்கவைக்க ஓடும் மக்கள் கூட்டத்தைப் பார்துக் கைதட்டி ஆரவாரம் செய்கின்றார்கள் அரசின் கூலிப்படைக்கள், புலிகள் மேல்கொண்ட வெறுப்பால் ஓடுகின்றார்கள் என்று அர்த்தம் கற்பிக்கப் படுகின்றது இவர்களால்.

இயற்கையின் தடைக்கு பழக்கப்பட்டு இருப்பவர்களிடம், மாவிலாற்றை புலிகள் தடைசெய்தபோது, அந்த சிறிய கிராமத்தின் மனித உரிமை பிரச்சினை என்று சமாதானத்தை உடைக்கும் போருக்கு பேர் சூடினாரகள்.
ஏன் ஐயா? அரசின் மனித உரிமை என்ற அர்தபதம் சிங்களவனை மட்டும்தான் உள்வாங்குகிறதா?
ஏன் என்றால் எமது அடிப்படை உரிமைகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கும் தடைகளுக்காக மட்டுமே, எமது சூழலுக்கு போராடும் உரிமை பல்லாயிரம் மடங்கு பொருத்தம் பூண்டு இருக்கின்றதல்லவா?

தன் தளபதிகளுக்கு எல்லாளனைக் காட்டியமைக்கு புலிக்காச்சல் வாயின் பித்தவுரை இப்படி; தோல்விகளின் சுமையில் மனவாட்டம் கண்ட தளபதிகளுக்கு மன ஊட்டச் சக்தி எல்லாளனாம்.
அதாவது தன் தளபதிகளிடம் தன்மேலான நம்பகத்தன்மையை கட்டி எழுப்புவதற்க்கு திண்டாட்டமான சூழலுக்குள் இன்று பிரபாகரன்.

இந்திய ராணுவம் என்ற புயலில்கூட கலங்காத நம்பகத்தன்மையை. இந்த மகிந்த பரிவாரத்தின் கூச்சல் தொலைக்கப் போகுதாம்.

உமது பித்த உரைக்கும், தினமினவின் கோமாளித்தன உரைக்கும் விதியாசம் மருந்துக்கும் இல்லை.
எல்லாம் இயலாமையின் கயிறு திரிப்புக்களே!
இத்தகைய பிழைப்பனவுகளில் வயறு வளர்க்கும் ஈனப்புத்தி; ஜென்மங்கள் செருப்பால் அடித்தாலும் தொலையாதவையே!

Tuesday 11 December 2007

முட்டையில் மயிர் பிடுங்கும் தத்துவவாதம்!

தத்துவபூர்வமான பார்வை அளவிடும் ஒரு அமைப்பின் நடத்தையியல்பு என்பது ஒரு பொது சமன்பாட்டு விதிகளுக்குள்ளேயே அடக்கப்படுகிறது.இந்திய வல்லரசு ஈழதில் களமிறங்கிய போது, தத்துவார்த்த பார்வையின் கணிப்பீடுகளின்படி, புலிஅமைப்பின் வரலாறு மீது புல் மிழைத்துவிட்டதாகவே கருத்துக்கள் ஆரூடம் கூறப்பட்டன.
அது போலவே தத்துவார்த்தபார்வையின் கண்ணுக்கு ஒரு அமைப்பின் நடத்தை மீது அடுக்கப்படக் கூடிய குற்றப் பிரேரணைகள் எவையோ? அப்படியே அதன் அடி ஒற்றி புலிஎதிர்ப்புவாதம் புலிஅமைப்பு மீது குற்றப் பிரேரணைகளை அடுக்கிக் கொண்டிருக்கின்றது.

புலிகளின் எதிரியார்?
தமிழீழ இலட்சியத்தின் குறுக்கே வரும் எந்த சக்தியுமே ஈழபோராட்டதின் எதிரிகளேதான். டக்ளஸ் எப்படி தமிழினத்துக்கு எதிரியானாரோ? அது போன்ற ஒரு சூழலுக்குள் குடியேற தயாராகும் எந்த சக்தியுமே தமிழர்களின் எதிரியேதான்.அதுவும் சொந்த கொள்கைகளே இல்லாமல் பிராந்தியவாத சக்திகளின் தூபத்தில் வளர்பவைகள் போராட்டம் என்று சொல்வதில் அர்தமே இல்லை,. வல்லரசின் அடிஆட் குழுக்கள், றவுடிக்கூட்டங்கள் என்பதுதான் பொருத்தமானது. இவைகளை களை எடுக்கவேண்டிய்து தமிழீழ இலட்சியத்துக்கு மிக அவசியமான காலத்தின் தேவையாகவே அன்று இருந்தது.

இதர அமைப்புக்களின் இழப்பால் ஈழம் என்ன நட்டத்தை அடைந்து விட்டது?வயலின் ஒரு வரம்பை வெட்டிவிட்டால் தண்ணீர் மறுவயலுக்குள்தானே போகும் அது போலவே, மனிதவலுக் கணக்குக்கு எந்த பாதிப்பும் வந்து விடவில்லை. எனவே புறம்போக்கு வாதங்களின்படி தொட்டுக்காட்டப்படும் பாதிப்பு என்ன?வினைத்திறன் கொண்ட உயர்ந்த தலைமைகளின் மூளைச்செல்வம் தனிஅரசு நோக்கிய ஏற்பாடுகளை இலகுவாக்கி இருக்கும்.காலநோய் கொண்டுபோக இருந்த ஒருவனின் உயிரை சிலதினங்கள் முன்பாய் எதிர்பாராத விபத்து கொண்டு போனது போலவேதான், இந்த அமைப்புக்களின் மீது விதி விதிக்கப்பட்ட அழிவு இயற்கையானது. புலிகளின் கரம் அந்த பழியை ஏற்றமை ஒரு விபத்துபோல் ஆன கதைதான். புலி என்ற அமைப்பின் பலம் இராணுவ மூகாம்களை சிறையில் அடைத்து பூட்டி வைத்திருக்கின்றது. நாட்டுக்குள் இவர்கள் தர்ப்பார், ஆளாளுக்கு போராட்டம் என்ற கொம்பனிகளை ஆரம்பிக்கின்றார்கள். அன்று புலிகள் பலம் இராணுவங்களை திறந்து விட்டிருந்தால் அனைத்து உயிர்களையும் இராணுவங்களுக்கு காவு கொடுத்திருப்பார்கள். ஏன் எனில் அனைத்து அமைப்பினரும் ஒன்றாகவே சேர்ந்தும் புலிகளையே எதிர்க்கும் படைவலுவே இல்லாதிருக்கும் போது எப்படி இராணுவத்தினரை எதிர்திருக்க முடியும்.
ஆக சொந்த இருப்பின் பிழைப்பையே காப்பாற்ற முடியாதவர்களிடம் எப்படி மக்களைக் காப்பாற்றும் பொறுப்பைக் கொடுக்கமுடியும்?

ஏனைய அமைப்புக்களில் இல்லாதிருந்த, புலிஅமைப்புக்களிடம், மட்டுமே இருந்த ஒரு அளவுகோலே என்னை மிகவும் கவர்ந்தது. அது புலி அமைப்பினால் உள்வாங்கப்படும் ஒவ்வொரு புதிய உறுப்பினனும், கல்வி, சாதி, உறவுநிலை அனைத்தும் ஒடித்து போடப்பட்டு ஒரு சமத்துவநிலையில் விடப்பட்டுகிறான். அவன் உயிர்க் கொடைப்பண்பில் மேல்படும் வெளிச்சத்தால் அவன் உயர்வு இனங்காணப்படும் அந்த அமைப்பால்.
இதுவே எந்த வல்லரசின் இடிகளுக்கும் நொருங்காத இரும்பின் உறுதி கொண்ட அத்திவாரங்களாக தாங்குகிறது அந்த அமைப்பு.

இந்தக்கருத்தை உண்மை என்று எப்படி நம்பலாம்?
மாத்தயா, கருணா போன்றவர்களுக்கும் பொருந்த வேண்டுமே இந்த வாதம் எனக் கேட்கலாம்.
போராளிகளின் தடயத்தை சகதிக்குள் சிக்கவிடாத வீதிதான் புலிஅமைப்பின் கட்டுப்பாடு. அதை ஆன்மார்த்தமாக விரும்பி ஏற்பவர்களை அன்னியச்சதி நெருங்க முடியாது. அதை கடனுக்காக ஏற்வர்களை சோரம் போகச் செய்வதென்பது பெருமுயற்சியாய் இராது.
மூளைச்சலவை என்கிறார்களே அது எந்த சவர்காரத்தல் செய்யப்படுகிறது.மூளையில் உள்ள அழுக்கு தேடிக் கண்டு பிடிக்கப் படுகிறது. பின் அந்த அழுக்குக்குள் அவன் கொட்டப்படுகிறான்.
இவன் இயற்கை வயப்பட்டு செய்யப்படும் தவறுகள் புலித்தண்டனையில் இருந்து ஒழித்தோட வேண்டிய புதிய சூழலுக்கு ஒரே காரணமாகின்றது, இன்னிலையில் முன்னால் விடப்பட்டுக்கிடக்கும் ஒரே வழியாக எதிரியிடம் சரணடைதல் என்ற விபரீதம் சதிமுயற்சிக்கு விளைச்சலாகிறது.

தத்துவார்த பார்வை ஒரு போராட்டத்தின் நடத்தையை விமர்சனம் செய்வதர்கு பயன்படுத்தும் பிரதான அஸ்திரங்கள்.

1. பிழைப்புவாதம்
2. அதிகாரபோதை.

இந்த இரண்டு அஸ்திரங்களுக்கும் குறிபிழைக்க வைத்துவிட்ட வரலாறுகளாக புலிகள் இருப்பது உலகம் அறிந்த உண்மை.
இந்திய வல்லரசின் இராணுவம் ஈழத்தில் களம் இறங்கிய போது, அதன் பகையை வாங்க போதிய விலையாக இருக்கத்தக்கது தமிழீழ இலட்சியம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும் புலிகளிடம்.சாவின் விலையில் பணம் பண்ணும் கிறுக்கன்கள் உலகில் எங்கும் உண்டா?
போர் என்பது தன்னை வேரோடும் அழிக்கும் விதியின் முடிவு என்பது தெரிந்தும், போரை முடிவாய் எடுத்தது தலைவனின் கொள்கைப் பிடிக்குள் கிடந்தது தமிழீழம் என்ற கனவுதான் என்பது, மூளை என்ற ஒன்று இருக்கின்ற எவனுக்கும் விளங்க கடினமாய் இருக்காது.

எனவே ரயாகரன், சிறீரங்கன் போன்ற கூட்டதினர் தத்துவார்த்தமான ஒரு எழுத்துவாததில் தான் இறங்கியிருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் கைகளுக்கு கொடுக்கப் பட்டிருப்பது புலிஅமைப்பு என்பதனால், “முட்டையில் மயிர் பிடுங்கிக் கொண்டிருக்கும் தத்துவார்த்தம்” என்று அவர்கள் எழுத்துவாதம் சொல்லப்படலாம்.

Sunday 9 December 2007

பிழைப்புவாததுக்கு சிங்களவாததின் கள்ளதொடர்பில் பிறந்ததுதான் புலிஎதிர்ப்புவாதம்!

சகபோராளி அமைப்புக்களின் பிழைப்பனவு மீது புலிச்சூறாவளி அடிக்க இருக்கின்ற காலம் அது.
TELO என்னும் அமைப்பே முதல் அடிவாங்கும் பாய்கியத்தைப் பெறுகின்றது.
அந்த இரவின் நடுப்பகுதி என்றும் இல்லாத ஒரு நாளாக இருந்தது. துப்பாக்கிகளின் வெடி ஓசைகள் தேசமடங்க சீறிக் கொண்டிருந்தது. பலருக்கு என்ன நடக்கின்றது என்று ஒன்றுமே புரியவில்லை. விடிந்த பிறகுதான் அது புலி இடிமுழக்கம் என்றும், அவை TELO பாசறைகள் மீது வீழ்ந்திருக்கின்றது, என்ற செய்தியும் அறிகின்றனர் மக்கள்.
இந்த இடிமுழக்கம் மக்கள் மனங்களில் சந்தோசப் பொங்கல் பொங்கியது என்பதுதான் உண்மை. ஏன் எனில் சிலமாதங்கள் முன்னதாகதான் இரண்டு துண்டாக அந்த அமைப்பு உடைந்து அணிமோதலின் உச்ச பச்சமாக உலகவரலாறே காறிதுப்புமளவுக்கு மிக கேவலமாக, நயவஞ்சகமாக மறுஅணியின் தளபதிகளை கொன்று குவித்தது.
அமைப்பின் தலைவர் சிறீசபாரத்தினம், உடைந்த இரு அணிகளின் தளபதிகள் போபி, தாஸ் என்பவர்களே ஆகும்.
பொபி சபாரத்தினத்தின் நெருங்கிய உறவு, கருத்தால் முரண்டுபிடித்த தாஸ் அணியை வேரோடு களைய சதியில் இறங்குகிறார்கள். இந்த அணியினர்.
சதி கத்தி தீட்ட துவங்கியது,
திட்டம் தயாராகியது.
சதி பிதாக்களால் நாடகம் ஒன்று மேடை ஏற்றப்படுகிறது.
யாழ்வைத்திய சாலையின் நோயாளர் பகுதி மேடை ஆக்கப்பட்டது.
நாடகம் சிறிசபாரத்தினம் சுகயீனமாய் படுத்திருக்கின்றார்.
தகவல் மறுஅணிதலமைக்கு அனுப்பப்படுகிறது “யாழ்வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் தாஸ் உடன் பேச ஆசைப படுகின்றாராம்” அவர்களிடையே இருந்த முரண்பாடு ஒரு பிஞ்சு நிலை விவகாரமாகவே இருந்தமையினால் இவர்களுக்கு சந்தேகம் துளிர்விடவே இல்லை. சாதாரண ஒரு பயணமாகவே அவர்களுக்கு அது விளங்கியது, யாழ்வைத்தியசாலைக்கு மேல்மட்ட உறுப்பினர்களுடன் தாஸ் பயணம் வெளிக்கிட்டார்.
வடமராட்சியை கோட்டையாக கொண்ட இந்த அமைப்பு போபியின் கோட்டையான யாழ்பாணம் ஊடாக பயணம் செய்தது யாழ்வைத்தியசாலையை அடைகின்றார்கள், வாயிலில் இருந்த பொபி அமைப்பினர் மென்மையாக அறிவுரை சொல்லுகின்றார்கள். “வைத்தியசாலையுள் ஆயுதம் தரிப்பது அழகில்லை" என்று, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டமுகமாக ஆயுதங்களைக் கைமாறுகின்றார்கள், சபாரத்தினத்தை நோக்கி பயணம் மேலும் தொடர்கின்றது. சபாரத்தினத்தின் வாட்டுக்குள் நுளைகின்றார்கள், நோயாளி வேசத்தில் அவரும் அவர் சகாக்களும் மறைந்த துப்பாக்கிகளுடன் வைத்தியசாலைக்குரிய சூழலை ஒருநிமிடம் அழகாக ஒப்புவிக்கிறார்கள்.
பின்னால் ஒழிந்திருந்த துப்பாக்கிகளின் விசை முதுகு குறிக்காக காத்க்துகிடக்கின்றது, வலைக்குள் விழ்கின்றது இந்த அப்பாவிப் பறவைகள். நிராயுதபாணியாக நின்ற அந்த தளபதிகளை ஆயுததாரிகளான அவர்களால் கைது கூட பண்ணகூடிய தைரியம் இருக்கவில்லை அவர்களிடம். இவர்கள் எப்படிப் பட்ட துடை நடுங்கிகளாக இருந்திருக்க முடியும். வைத்தியசாலை ஒரு ரணகளமாகிக் கிடந்தது. சிலநொடிகளில் அனைவரும் இரத்த வெள்ளத்துக்குள், வைதியசாலை தாதி ஊழியர்கள் உட்பட.
எபடி இருக்கின்றது இந்த போர்? முதல் கட்டம் நிராயுதபாணிகள்.
இரண்டாவது முதுகுக்கு பின்னாலிருந்து சூடுகள்.
வைத்தியசாலையுள், இயலாமை என்ற வேசம் பரிதாப்பட்டவனின் முதுகைக் கேட்கிறது!
உலகின் கோழைத்தனங்களை ஒன்றாக்கினாலும் இவர்கோழைத்தனங்களை மிஞ்சவருமா?
கோழைநோய் ஒருவனின் பீழைப்புத்தியை காட்டிக்கொடுக்கும் இயற்கையின் வியாதி!
இதுடன் அவர்கள் கேவலவரலாற்றின் கதை முடியவில்லை, இதை அறிந்து மக்கள் வெள்ளம் திரண்டு அவர்கள் முகாம்களை சூழ்ந்து கோசங்களால் அறைந்தனர் இந்த கொடியவர்களின் கன்னதில்.
சப்பிகளின் இந்த போராட்டதுக்கு துப்பாக்கிகளின் பாசைகளை அன்றி வேறு என்னத்தைதான் அறிவார்கள்?
மீண்டும் அதே பாணியில் அவர்கள் துப்பாக்கிகள் பேசத்துவங்கியது சரிந்தன அப்பாவிகளின் உடம்புகள், ஏனயவை நிலைதெரியாது தம் கால்கள் போனபாட்டில் ஓட்டம் எடுத்தன, இப்படி மக்கள் மனங்களில் மறக்க முடியாத ஒரு இடத்தை பிடித்த அமைப்புக்கு விழுந்த அடிதான் புலிகள் மக்களுக்கு கொடுத்த தமிழீழத்தின் பூர்வாங்க பரிசு என்றால் தவறாகுமா?
இப்படியேதான் ஏனய போராட்டங்களும் தமக்கென ஒரு நல்ல பேரை மக்களிடம் எடுத்த பிறகுதான், புலிச்சூறாவளி வேரோடு பிய்த்தெறிந்தது அவர்கள் கூடாரங்களை.
இவை துப்பாக்கி பலத்தில் வளமாய் இருந்த அமைப்புக்கள்தான் கொஞ்சம் எதிர்ப்புக் காட்டின ஏனய குஞ்சு அமைக்குககள் பலவும் இருந்தது. அவைக்கு பசைக்கும் பேப்பருக்கும் தான் வசதிகள் இருந்தன ஏனவே பசை ஈரத்தை தம் சட்டைகளில் பிரட்டி, காயவைத்து அவர்கள் மக்களோடு மக்களாகி விட்டனர். புலிப் போரின் நோக்கம் முடிந்தவரை இரத்தம் சிந்தாமல் அமைப்புக்களை கலைப்பதே என்பதால், ஒரு திசையில் இருந்தே தாக்குதலை கொடுத்தார்கள் எனவே 95% உறுப்பினர்கள் ஓட்டம் எடுக்க வசதியை ஏற்படுத்தி கொடுத்திருந்தது. சூழ்நிலை சிக்கலில் மாட்டுபட்டு ஓட மறுத்தவர்கள் மாண்டார்கள்.
அன்றைய காலகட்டதில் புலிகளின் ஒட்டு மொத்த தொகையே வெறும் ஆயிரத்தை தொட்டிருப்பது மிக அருமையாய் இருந்திருக்கும். எனவே இந்த சூறாவழியின் சேதாரம் என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாக்கலாம்.
இந்த சக அமைப்புக்களின் கருஅறுப்பு சூறாவளி எம்முறத்திலேயே வீசியதனால்தான் அதன் நன்மைதீமை உணர்ந்த எம்மால் புலிகளின் மேல் குற்றம் பாராட்ட முடியவில்லை. தூரத்து உறவுகளுக்கு இந்தக்கதை சிங்களவாததாலும் அவன் அடிவருடிகளாலும் தலைகால்கள் வைத்து சோடித்து காண்பிக்கப் படுகின்றது.

“மக்கள் என்பக்கம்” என்று சொல்கிறார்கள் இவர்கள்!
சங்கரியார்
கருணா.
பிள்ளையான்
டக்ளஸ்.
மகிந்தா.
சந்திரிகா.
சிறீரங்கன்.
ரயாகரன்.
எனவே மக்கள் என்ற தோல் போர்த்துகின்ற எல்லாமே சிங்களவாததின் குட்டிப் பூதங்களே. இவை ஒவ்வொன்றின் செயல்வாதங்களும் தமிழன் முதுகில் செருவும் கத்திகளே!

ஊர் அறிய செத்துபோய் விட்டவன் உடம்புக்கு, தலை என்றும், கால் என்றும் சோடித்தல், உயிரை தருவிக்காது என்ற உண்மை குழந்தையின் புத்திக்கே வெளிக்கும்.
வெறும் வாய்சப்பி வயிறு நிரம்பாது, இதையேதான் ரயாகரனின் எழுத்துவாதம் தலைகீழாய் நின்று வெறும் பல்லைச் சப்பிக் கொண்டிருக்கின்றது.
ரயாகரனிசத்தின் புலம்பல்கள் எல்லாம் புலிக்காச்சல் மெத்தி வரும் சன்னி என்று எடுத்துக் கொள்வேம்.

Wednesday 5 December 2007

ரயாகரனின் புலிதுவேசப் பித்தம் தலைக்கு ஏறி இருப்பது.

ரயாகரனின் புலிதுவேசப் பித்தம் தலைக்கு ஏறி இருப்பது.
பணத்தினாலா? பகுத்தறிவினாலா?
புலித்தேசியம் வேறாம், தமிழ்தேசியம் வேறாம்.
எடுகோள்கள் கொண்டே ஒவ்வொரு தேற்றங்களும் நிறுவப்படும்.
ரயாகரனிசத்தின் புளுத்துப் போன பொய்களையே எடுகோள்களாக கொண்டு நிறுவப்படுவது தேற்றங்களா?
இல்லை உள்ளக் கனவுகளா?
அவரின் எடுகோள்கள்.
புலிகளை மக்கள் வெறுக்கின்றார்கள். ( மக்கள் ஆதரவு என்பதை எப்படி மக்கள் வெளிப்படுத்த முடியுமோ அப்படி ஈழத்திலும் வெளிப்படுதி ஆகிவிட்டது. அவர்கள் துப்பாக்கிகளுக்கு பயப்பிடும் தூரத்தில் இல்லாத புலத்திலும் வெளிப்படுத்தியாகி விட்டது இவர் முருங்கையை விட்டு எப்பதான் இறங்கப் போகிறாராம். கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் புலத்தில் புலிகளின் பின்னால் திரளும் மக்கள் வெள்ளத்தை பார்க்கலாம்.)
புலிகள் பலத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டு விட்டது தோல்வி அவர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றது. (இது ஜேஆர் ஜேவர்தனா காலத்தில் இருந்து மகிந்த காலம் வரைக்கும் சிங்களவர் பாடும் பாட்டல்லவா, தாங்களும் அட்சரம் பிசகாமல் பாடுவது தான் பகுதறிவுக்கு அழகா?)
மக்கள் ஆதரவுடன் இயங்காத எந்தப் போராட்டமும் உலகில் வென்றதாக சரித்திரம் இல்லை. ( மக்கள் ஆதரவுக்கு மகேசனா ஆயுத வினயோகம் செய்வது அட தரித்திரமே பூகோள பின்னணியின் செல்வாக்குதான் போராட்டங்களை இயக்கின் கொண்டிருப்பது. அட சனியனே இதைக் கூட விளங்கமுடியாத அறிவு மட்டம் போராட்டதுக்கு பாடம் வேறு எடுக்கின்றதா?)
மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் போராட்டமாக மறுக்கப்பட்டு சிலருக்காக சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது அது தோற்கடிக்கப்படுகின்றது. (அட நீர் சொல்லும் சிலர் நலனுக்கான போராட்டம் என்றால் சிங்களம் போர்தளபாடம் வாங்கும் காசுக்கு வைக்கும் தெட்சனைக்காசு போதும் அந்த நலங்களை வாலாட்ட வைப்பிக்க. சிங்களத்திடம் அடைமானம் வைத்துவிட்ட டக்ளஸ் இன் போராட்டத்தை பார்க்கலாமே, அதை விட்டு மரண சுருக்கு கயிற்றில் தானே தலையை கொளுவுகின்ற இந்த போராட்டமா அதற்க்கு வாழ்வு தரும் என்று சொல்ல வருகின்றீர். சாட்சியின் காலுக்கே (டக்ளஸ், ரயாகரன்) இவளவு பொருள்தரும் சிங்களம் எதிரியின் கால்களுக்கு எவளவு தருவான். இதெல்லாம் உமது பகுத்தறிவுக்கு உறைக்காதோ?
வெல்வதற்க்கும் எதிரியை தோற்கடிப்பதற்க்கும் சில அரசியல் நிபந்தனைகள் உண்டு ( தன் வாந்தியைப் பார்திருப்பார் புலிகள் பூசையின்போது வெற்றியை எங்கே பார்திருப்பார்? போர் அறிவியல் கரைத்துக் குடித்த மாமேதைகளே நீங்கள் எல்லாம் இந்திய வல்லரசின் செல்லப் பிள்ளைகள் அல்லவா இருந்தும் எந்த அரசினதும் பின்புலம் இல்லாத புலிகளிடம் தோற்றோடியது ஏனோ? அதிரடியாக புலிகள் தாக்கினார்கள் என்று சொன்னால், புலிகள் ஒவ்வொன்றாகத்தானே கால இடைவெளி நிறையவே விட்டுதானே உங்களை துடைத்தெடுத்தார்கள் அப்போது உங்கள் போர் ஞானம் எல்லாம் விடுமுறையில் சென்றிருந்ததா?
6. மக்கள் தமது யுத்தமாக கருதி அதை நடத்தாதவரை எந்த யுத்தத்தையும் வெல்லமுடியாது. (அண்டைச் சக்திகளில் நலன்களுக்கு தன்னை தியாகம் செய்கின்ற போராட்டங்களின் போக்கு வேறு, ஒட்டு மொத்த தன் தேசிய நலன்களுக்கு போராடும் போராட்டங்களின் போக்கு வேறு. இன்றுவரை இந்த போராட்டம் எந்த சக்திகளின் தயவும் இல்லாமல் பூகோள அமைப்பின் காரணத்தினாலும் உலக வல்லரசின் துணையோடு நிற்கின்ற எதிரியை வென்று தன் ஆட்சி நிலத்தை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்ற புலிகளுக்கு மக்கள் சக்தி என்ற ஆத்ம பலம் இல்லை என்றால் அவர்களால் எப்படி கோடு போட்டு எதிரியின் நகர்வை தடுத்து நிறுத்தி இருக்கின்றார்கள். புலிகள் சிங்கள அரசின் போரை எதிர் கொள்வதென்பது ஒரு வல்லரசின் பகையை ஒரு சாமானிய ஒரு சிறிய குழு எதிர் கொள்வ்தைப் போன்றது. மனித வலுவிலும், போர்க்கல வசதிகளிலும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பதின் உச்சதில் நிற்கின்ற அரசை. நாம் தனி அரசு ஆகியிருந்தால் கூட அதன் கால்பங்குக்கும் இல்லாத பெரிய அரசுடனான போர், வெற்றிவாகை சூடுவதென்பது நடைமுறைக்கு மிக மோசமான விலைகேட்கின்ற ஒன்றுதான் அதை புலிகள் போராளிகளாகவே இருந்து சாதித்திருப்பது உலகசாதனை என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஒரு வைத்தியனை எப்படிப் பட்ட சூழ்நிலை உருவாக்கி கொடுக்க முடியுமோ அப்படியே இராணுவ மேதைகளின் உருவாக்கமும் உலக இராணுவவியல் அறிவு பட்டை தீட்டி கொடுத்த சிங்கள படை மேதாவிகளை வைத்து புலிகள் கோலிகள் விளையாடுகின்றார்கள் இவற்றை நினைத்தால் சிரிப்புக்கூட வந்து விடுவதில்லையா? நெஞ்சில் என்ன வறுமை நியாயத்துக்கு)
7. புலித்தேசியம் வேறாம், தமிழ்தேசியம் வேறாம். ( எட்டப்பவாததேசியம் வேறு. புலிபோராட்டதின் தேசியம் வேறுதான். புலிதுவேசம்சத்தை ஊதி வளர்தெடுக்க வேண்டிய தேவை, வளங்கும் பெருநன்மையின் பெறுனர் யார்? சிங்களவாதமா? தமிழ்மக்களா? ஆயுத கலாச்சாரமே தமிழர்களை அறிந்திராத காலத்தில் பத்துதடவைகளுக்கு மேல் இனப்படுகொலையில் தமிழனை வேட்டையாடியவர்களிடம் தமிழர்களை ஒப்படைக்க வேண்டுமாம், அப்படி என்றால் போராட்டதின் ஆரம்ப புள்ளிக்கு வந்து இந்த போராட்டதின் பிறப்புக்கு ஒரு தேவையே இல்லை என்பதை மறைமுகமாக அடித்துச் சொல்வதற்க்குச் சமனாகும். ஆக சிங்கள அரசிடம் எமது உரிமைகளை வாங்கித்தருவதற்க்கு ஓரு ஆயுத போராட்டம்தான் தகுதியானது என்பது இந்திய அரசினது முடிவாக கூட அன்று இருந்ததால்தான் ஆயுத பயிற்சிகளில் இருந்து ஆயுதங்கள் வரைக்கும் அள்ளிக் கொடுத்திருந்தார்கள். அன்று இருந்த சிங்களத்தின் கடும்போக்கே இன்றும் மாற்றுகுறையாமல் இருக்கின்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. என்வே இன்றும் ஆயுதபோராட்டம் தான் தேவை என்பது பழைய தேற்றங்களில் இருந்து எடுக்கப்படும் புதிய தீர்வு. ஆக இந்தியா ஆதரிக்கவில்லை. அமெரிக்கா ஆதரிக்கவில்லை என்பது பிரச்சினைக்குரியதா? இல்லை தமிழர்கள் ஆதரிக்க வில்லை என்பது பிரச்சினைக்குரியதா? வல்லரசுகள் ஆதரவு இல்லை என்பது சொல்லும் உண்மை என்ன? நியாயத்தின் பக்கம் போராட்டம் இல்லை என்பதா? இல்லை நியாயத்தின் பக்கமே எப்போதும் தோளைக் கொடுப்பது உலகப்போக்கின் வழப்பம் என்பதா? இது ரயாகரனின் சொந்த அறிவின் ஊற்றா? இல்லை பணத்துக்கு ஊறும் அறிவின் ஊற்றா? அற்புதனின் கேள்விக்கு திருவாய் மலர்தருளிய பதில் இது. இப்படி புலிகள் செய்வதாக கூறுவதை மறுத்து நான் இன்னொரு கட்டுரை எழுதவேண்டிய அவசியம் கிடையாது. ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் தெரியும் என்ன நடக்கிறது என்பது { அட சிவனே தமிழ் மக்களுக்குள் என்ன இருக்கின்றது என்று தெரிந்துதான் இப்படி பிதற்றுகின்றாயோ?} புலிகள், அல்லது புலிஆதரவாளர்களுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை மனிதனின் எதார்த்த உண்மையை நான் அவர்களுடன் விவாதிக்க விரும்பவில்லை நாங்கள் மக்களுடன் தான் விவாதிக்க விரும்புகின்றோம். { அப்ப புலிகளை ஆதரிக்கின்ற மக்களுடன் இவர் இவாதிக்க தயார் இல்லை நாட்டில் புலிகள் படையைக் கண்டு சிங்களம் நடுங்கியதாலேயே சமாதானப் பேச்சில் இப்போதும் வெளியேறாமல் இருக்கின்றது. வெளிநாடுகள்: அதற்க்கு கிடைக்கும் மக்களாதரவு என்ற பின்னணியைக் கண்டு நடுங்காவிடின் ஏன் இந்த நாடுகளில் புலித்தடை வரவேண்டும் புலிகள் வற்புறுத்தி பணம் சேர்ப்பதை தடுப்பதற்க்காக என்று ஒருதரப்பு சொல்கிறது. அட்ட கடவுளே வற்புறுத்தி பணம் பறிப்பதை தடுப்பதற்க்கு இந்த நாடுகளில் ஒரு சட்டம் இல்லாமலா போய்விட்டது? தனியே அதற்க்கென்று சட்டம் கொண்டுவர? ஐயா உங்கள் கருத்துக்களுக்கு எத்தனை கூட்டம் வைத்திருக்கின்றீர்கள்? அந்த பிரமாண்டத்தை காட்ட முடியுமா? புலத்தின் எந்த மூலையிலாவது ஒரு அச்சுப்பதிப்பில் ஒரு புலிஎதிர்ப்பு புராணம் ஒன்றை விற்று காட்ட முடியுமா? மகிந்தா கூட சொல்லும் அதே பல்லவிதான் தமிழ்மக்கள் எனக்கு பின்னால் தான் என்பதையே நீரும் சொல்லுகின்றீர். அடிவருடி உனக்கு எப்படி தைரியம் வரும் எம் கேள்விகளுக்கு பதிலகள் தர} என்,எல், எப்,ரி பி, எல். எப், ரி தீப்பொறி பாதுகாப்பு பேரவை பாசறை என்ற இடதுசாரி அமைப்புக்கள் அழிக்கப்பட்டமை அவை மேலான படுகொலைகள் எல்லாம் பாட்டாளி வர்க்கதுக்கு எதிரானது. { இன்று டக்ளஸ்க்கு போட்டியாக இவர்கள் இருந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இவர்கள் கலைக்கப் பட்டார்கள் ஆக 80,000 மக்களை சிங்களவன் கொன்று குவித்தான் அது பற்றி வருத்தம் இல்லை இந்த அமைப்புக்களை கலைத்ததுதான் றொப்ப பழி புலிகளுக்கு வந்து சேரப்போகின்றது. எலும்புதுண்டுகளை டக்ளஸ் வெளிச்சதில் வைத்து நக்குகின்றான், ரயாகரன் இருட்டுக்குள் வைத்து நக்குகின்றார் இவற்றை விட வித்தியாசம் வேறு இல்லை.


http://www.tamilnaatham.com/photos/2007/NOV/20071129/LONDON/slides/IMG_7182R.html

http://www.tamilnaatham.com/h_photos20071127.html