Monday, 19 November 2007
பயங்கரவாதத்தின் புதிய இலக்கணமா?
மண்ணில் கொடிபடர - அவற்றின்
முழுமுதல் குறிக்கோளாக இருப்பது
பணமே!
வேசம் போட்ட இராசாவேசத்தை வெளிப்படுத்தும்,
உண்மை சூழ்நிலை நேர் எதிர்க்கும் போது.
புலி இரத்ததின் பரிசோதனை முடிவு பயங்கரவாதமாம்!
புலி இரத்தத்தின் நோய்க்கு காச்சல் காய்வது.
இந்தியாவுக்கும், சிங்களத்துக்கும், பிராந்தியவாத சக்திகளுக்குமாம்!
ஏன் தமிழீழம் மட்டும் தடுப்பூசியா போட்டுள்ளதா?
உலகம் பூராகவும் பரந்துவாழும் ஈழத்தமிழர்களுமா தடுப்பூசி போட்டுள்ளார்கள்?
புலிகள் கொள்கையே! இந்திதுவத்தின் உண்மையான பகை என்றால்
யதார்த்தம் நம்ப அதில் உண்மை இருக்கின்றது.
அவர்கள் பயங்கரவாதம் தான் இவர்களின் பகை என்றால்
அது பயங்கரவாதம் தானா என்பதை,
காலம் தன் அநுபவத்தை உரைத்து உண்மை அறியாதோ?
இன்றுவரை இரு அரசுகளும் புலிஎதிர் போருக்கு
கொடுத்த மொத்த தெட்சனைகள் (உயிர்கள் தவிர்த்து)
ஒவ்வொரு புலி உறுப்பினருக்கும் சமமாக பகிர்ந்தால்
உலகவரிசையில் இருக்கும் செல்வந்தர் தரத்துக்கு
அவர்கள் வாழ்கையை வைப்பிக்க முடியும்
புலிகள் இதற்க்கு இசைவாகளே என்றால்,
அவர் காலில் வீழ்ந்து இதைக் கொடுக்கவும்
இந்த அரசுகளும் முண்டி அடிக்கும்.
அந்த அற்புதமான எதிர்காலம்,
வாசல் திறந்துவைத்து காத்திருக்கும் போதும்.
குருதி நனைந்த நிலத்தில் உறுதி சுமந்து நிற்பதுதான்
பயங்கரவாதத்தின் புதிய இலக்கணமா?
Tuesday, 23 October 2007
புறநானூறின் இலக்கிய நயம் பிச்சை எடுக்கவேண்டும்!
புறநானூறில் இலக்கிய நயத்தின் சாரல் ஒன்றில் இருந்து,
பண்டைத்தமிழ் மன்னன் ஒருவனின் காலாட் படை ஒன்று களமுனை நோக்கி நகர்கிறது, நெடிய காடுபோல் நகரும் அந்த சேனை ஒரு பனந்தோப்பு ஒன்றை அதன் துவக்கம் சந்திக்கும் போது அந்த தோப்புக்கு நொங்குக்காலம் எனவே நொங்கைக் குடித்து களிக்கின்றது சேனை.
அப்படியே கடந்து கொண்டிருக்கும் சேனையின் முடிவுப்பகுதி இந்த் தோப்பை அடைய பனங்கிழங்குக் காலம் தொடங்கி விடுகிறது அவர்களோ பனங்கிழங்கை சுட்டு தின்று மகிழ்கிறார்கள் என அமைகிறது அந்தப்பாடல் எவளவு அழகாக படையின் பிரமாண்டத்தை இலக்கிய நயம் சொட்டச் சொட்
ட சொல்லப் பட்டிருக்கிறது.
ஆனால் இன்று சிங்கள அரசுகள் கையாளும் இலக்கிய நயம் தொட்டுக் கொள்வதற்க்கு புறநானூறூ ஆகுமா என எண்ண வைக்கிறது.
படைவிலகல் மாட்சியை எவளவு அழகாகச் சொல்கிறார்கள் என்று பாருங்கள் படையை விட்டு ஓடுபவர்கள் எவளவுகாலமாக ஒடிக்கொண்டிருக்கிறார்கள் நொங்குக் காலத்தில் இருந்து கிழங்குக்காலம் வரைக்குமா கிழங்குகள் எல்லாம் தோப்புகள் ஆகியும் இப்போதும் ஓடிக் கொண்டேதான் இருக்கிறார்களாம் அப்படி என்றால் உலகின் படைகளை எல்லம் ஒன்றாக்கினாலும் கற்பனையின் கடனை அடைக்குமா அந்த தொகை.
என் சின்ன வயதில் ஒரு நன்பன் சொல்வான் இப்படி வானம் ஒருநாள் தலைக்குமேல் விழப்போகிறது, அதற்க்கு இன்னொருவன் பதிலழிப்பான் விழத்துவங்கினாலும் அது பூமியத்தொட 100 வருடங்களுக்கு மேலாகும் என்று.அதுதான் நினைவுக்கு வருகிறது எனக்கு ஏன் எனில் புலிகள் விலகி ஓட்டத் தீர்மானித்தாலும் அதுவும் முடிவுக்கு வர 30 ஆண்டுகள் அவர்கள் தொகையின் பாதி ஓடிமுடியக் காணாது ஏன் எனில் இதைத்தானே வியஜரட்னா, ரம்புக்கல ஏன் ரயாகரன் வரைக்கும் படித்துப் படித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பாவம் இந்தப் பாணர்களின் இயலாமை இலக்கிய நயமும் எமக்கு சுவையாகத்தான் இருக்கிறது.
Monday, 3 September 2007
புலிஎதிர்ப்பு என்ற புதியபாதை விடுதலைக்கு ஏன் வெளிச்சம் காட்டாது?
என்ன தேவைகள் அதன் அடிப்படையாக கொள்ளத் தக்கதாகும்.
சிங்களத்தின் போக்கில் தானாக வந்திருக்கத்தக்க நல்ல மாறுதல்களை புலிகளின் நடவடிக்கைகள் கெடுத்து விட்டது என்பதாலா?
காகிதங்களில் முடிவுவரை எட்டிய தீர்வுகள் ஜனனாயகத்தின் செங்கோல்களால் பரிதாப கரமாக கிளித்தெறியப் பட்டமைக்கு யார் காரணம் தமிழ்துவேசமா, புலித்துவேசமா?
புலிகருவுற்றதே அந்த சம்பவங்களின் பின்னாட்களில்த் தானே!
இன்று கூட இனப்பிரச்சினை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளவதில்கூட தன் பொறுப்பை காட்ட தயங்கும் சிங்களத்திடம் கையேந்தும் போக்கு பெற்றுத்தரும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது அல்லவா?
புலிப்போரின் சேதாரங்கள் சிங்கள் ஆட்சியின் அத்திவாரம் வரை ஆட்டம் காணச்செய்தும்,
தமிழர்களின் உரிமைகளின் மீதுள்ள அந்த உடும்புபிடியில் மட்டும் மாற்றம் எதுவும் ஏற்படாமை என்னத்தை சொல்லுகிறது?
சிங்களவாதம் தனக்கு அகிம்சையில் உள்ள பற்றுறுதியைக் நிலைநாட்டுவதற் காகவா அந்த உடும்புப் பிடி புலிப்பயங்கரவாதத்தின் இம்சைக்குள் தவம் கிடக்கிறது என்பதையா?
சுத்தமான ஜனனாயகம் வாழும் நாட்டின் காட்டு மிருகங்களின் கொலைகள் கூட தடுக்கப் படுகிறது.
அரச சிறைக்குள்ளே கூட்டம் கூட்டமாக அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள், "வெளியில் இருந்து வந்த ஆயுத தாரிகளால் கொல்லப் பட்டார்கள்" என்று அரசு தருவது பொறுப்பான பதில்களா?
சிங்கள நிர்வாகத்தின் பாதுகாப்புக் கூட பாதுகாக்க முடியாது தமிழன் உயிர் என்றால்
தமிழனை தன்வீட்டு நாயாக வைத்திருக்கவா சிங்கள ஜனனாயகம் ஆசைப் படுகிறது.
மெலிந்த இனத்தை வலிந்த இனம் ஆடும் நரவேட்டை ஜனனாயகம்,
வலிந்த இனத்திடம் மெலிந்த இனம் செய்யும் தற்க்காப்பு பயங்கரவாதம். தமிழரின் தலைமைப் பொறுப்பு புலிகளின் கையில் சேருவது என்பது சிங்களத்துக்கு உடம்பு முழுவதும் கசக்கின்ற விடயம், ஏன் எனில் பலதலைமுறைகளாக வெற்றியை சாதனையாக நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் ஏமாற்று வித்தைக்கு புலிப்போராட்டமே அதன் புதைகுழிகள் என்பதனாலா? இல்லை தமிழன் துன்பங்களின் மேல் கொண்டுள்ள அக்கறைகளினாலா?
துரும்பைக் கூட தமிழனுக்கு கொடுக்கத் தயார் இல்லை என்ற போக்குக்குத்தான் தமிழர் தலைமை புலிகளிடம் இருப்பது பிடிக்கவில்லையோ? அல்ல தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்ட சிங்களவர் கொள்கைக்குத்தான் புலித்தலைமை வெறுப்பாகின்றதோ?
நல்லது செய்வதே உண்மையானால் தலைமையை முடிவு செய்கின்ற போறுப்பு தமிழர் தரப்பினதே என்று விலகிப் போகலாமே, புலிகளின் தலைமைக்கு உலக அங்கீகாரம் கிடைத்து விடும் என்ற பயம் ஒன்றால்த்தானே தமிழர் பிரதேசத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இதுவரைகாலமாக அரச போக்கு முட்டுக்கட்டையாக இருப்பதன் அடிப்படை நோக்கம். எனவே தமிழ்த்தரப்புக்கு புலிகளின் தலைமையை எந்த அளவுக்கு சிங்களம் வெறுக்கிறது என்பது தமிழர் உரிமையைக் ஒப்படைக்க எந்த அளவு தூரம் மறுக்கிறார்கள் என்பதனால் அல்லவா அளக்கப் படுகிறது.
புலிகள் தவிர்ந்த வேறு ஒரு தலைமையாக இருந்திருந்தால் ஈழத்துக்கு இணக்கமானதாகவே இந்தியப் போக்கு இருந்திருக்கும்.
சரி இன்று நூறு காரணங்கள் சொல்ல வைத்திருக்கிறார்கள் புலி வெறுப்புக்கு, எனவே இதன் துவக்கத்துக்கு வந்தால் என்ன காரணம் சொல்ல முடியும்? இந்திய எடுப்பாரின் கைப்பிள்ளையாக ஆக வில்லை இந்த புலிப் பிள்ளை இது ஒன்று தானே அதன் மூல மந்திரம். சமாதானத்தின் நடுவனாக வந்து முதுகில் குத்திய சதியிடம் எமது இருப்பை காப்பாற்றியது நன்றி கெட்டதனமா? சிங்கள இனத்துவேசம் வேட்டையாடிக் கொன்று கொண்டிருக்கிறது தமிழன் உயிர்களை தன் இனத்தின் இரத்தப் பெருக்கை தடுப்பாதற்க்காக அந்த இனம் போராட்டத்தை துவக்குகிறது. இந்த இரத்தச் சகதிக்குள்ளே ஒரு வெளி விவகாரக் கழுகு ஒன்று தன் தேசநலன் என்ற ஏரை இறக்குகிறது. நாம் எம் இனத்தின் இருப்பைத் தக்க வைக்க அதற்க்கும் ஒரு புதிய பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டி இருந்தது. தமிழனின் தீர்வு கனமாக இருந்து விடக்கூடாது என்று ஏங்கும் இந்தியச் சிந்தனைவாதத்துக்கு புலிகளின் தலைமைதானாம் ஈழத்தினுடைய துன்பதுக்கு தம்மை எட்டநிற்க்கவைக்கிறதாம்.
வட இந்தியா ஒரு தனிநாடாக இருந்திருந்தால் அதன் வெளிவிவகாரக் கொள்கை எப்படி இருந்திருக்கும், அதன் தேசநலன் என்ற கருதுகையின் போக்கு எப்படி இருந்திருக்கும். அதுவே இந்த இந்தியா என்ற நாட்டுக்கும் தேசக் கொள்கைகளாக திணிக்கப் படுகிறது. தமிழ் நாட்டின் உணர்வுகளைப் புறக்கணித்து ஈழத்தவனின் இரத்தத்தில் இந்திய பழி(வெளி)விவகாரம் தேசநலன் என்ற அறுவடைக் கொள்கையை களம் இறக்கியது. நாம் பல ஆண்டுகளாக இரத்தம் கொடுத்து காப்பாற்றிய போராட்டத்தின் கொள்கைகளை தன் தேசநலனுக்கு தூசுதட்டியாக உபயோகப் படுத்த முனைந்தார்கள் நாம் மறுத்தோம் பிடிவாதம் செய்தார்கள், மோசமான அவர்கள் கொள்கைக்கு பலியாகாமையை பயங்கரவாதம் என்று சாதிக்கிறார்கள்.
அகிம்சையால் சுதந்திரத்தை வாங்கியவர்கள் வங்கதேசத்துக்கு போருக்கு சென்ற போது அதை மறந்து விட்டு விட்டா சென்றார்களா? இலங்கை அரசுக்கு எதிராக தமது நாட்டில் பயங்கரவாதத்துக்கு பயிற்சிகள் கொடுத்த போதும் அதை ஞாபகாத்தில் இருந்து அழித்து விட்டா செய்தார்கள்? குறித்த தூரம் வரைக்கு இந்திய விடுதலைப் பயணத்துக்கு காந்தி தேவைப் பட்டார், விடுதலை என்ற சந்திக்கு அப்பால் இந்தியப் போக்குக்கு அவரே முதல் எதிரியானார் அவரால் விதை நட்டு விருட்சமாக்கிய கொள்கைகள் அனைத்தும் அவரோடு கூடவே சமாதி ஆக்கப் பட்டன. ஆங்கிலேயனை முரண்பட்டு தப்பிய உயிர் பிராமணனை முரண்பட்டு உயிர் வாழும் தகுதியை இழந்தது அகிம்சையின் பெருமையை யார் பேசவேண்டும் என்று இனியாவது புரிந்து கொள்வீர்களா?
Friday, 31 August 2007
இயலாமையின் சமாதானம்
அதை விடுத்து சோதிடனின் பாணியில் தன் விருப்பத்தை சொல்லி அதை விதி என்று சாதிக்க முற்படுவதால் பலன் ஒன்றும் இல்லை.
இது வரை வந்த ரயாகரனின் எந்தப் பதிவும் மக்கள் மனங்களை வெல்லும் தகுதியில் இருந்ததே இல்லை.
தன் வயிற்றெரிச்சலை குடிவெறியில் ஆற்றுகின்ற ஒரு குடிகாறன் பேச்சின் தராதரத்திலேயே அத்தனையும் இருக்கிறது.
இவர் எழுத்தாழுமையின் உவமானங்களின் தராதரத்தைப் பாருங்கள்,
தின்பனவின் பின்வருவனவற்றாலேயே சொல்லுக்கு சொல் நாற்றமடிக்க
வைப்பார், இந்த இலட்ச்சணத்தில் பொதுவுடமைவாதம் வேறு இவர் பற்களுக்குள் அகப்பட்டு இம்சைப் படுகிறது.
சொல்லமுடியாத பாதகங்கள் எல்லாம் செய்து சிறைக்குள் வாழுகின்ற ஒருவன் பொதுவுடமைக்கு எதிரான அரசு இது என்று போங்கி எழுந்தானாம்.
ஐயா பொதுவுடமையை ஒருமுறை எழுதிடும் மையளவுக்காவது உன்னுடைய நடவடிக்கைகளில் நன்மைகள் இல்லாத போது எதற்க்கு உந்த வேசங்கள் எல்லாம்?
சிங்களம் தமிழர்கள் எல்லோரயும் புலிகள் என்று பார்ப்பது சரிஎன்று படுவதாலேயே அவர்களுக்கு தீர்ப்பாக வளங்கப் படும் அவலங்களும் சரியானதே என்று திருப்த்திப் படுகிறது.
அது போலவே உமக்கும் புலிஆதரவு என்ற பதத்தை புலிஎன்று பாவிக்கப் படுவது நியாயம் என்று படுகிறது, அதனால் தானோ விசருகள், நாய்கள், எருமைகள் போன்ற சொற்கோவைகளால் விமர்சனம் செய்யப் படுகிறார்கள் புலிஆதரவாளர்கள்.
ஐயோ பாவம் பொதுவுடமை வாதத்தின் கொள்கை!
உங்கள் கருத்துக்கு எதிர் நிலையானவரின் நிலைமையின் நியாயத்தன்மையை விளங்கிக் கொள்ள முடியாதவனுக்குத்தான் வன்முறை வெறி பிறக்கிறது எனவே கருணாகூட்டத்துக்கு தோதான குணம் உம்மிடம் இருக்கிறது ஆனால் இயலுமை பேனாதூக்க மட்டுமே தோதாகிறது.
இரண்டு திருடர்களில் மதிப்பு குறைந்த பொருள் திருடியவன் மனிதாபிமானம் பேசுகிறான் என்றால் தன் இயலாமையின் கொட்டாவிக்கு மனிதாபிமான வேசம் போடுகிறான் என்றுதான் பொருள், அதுபோல் கருணாவின் தேசத்துரோகம் பொருந்தும் அதே அச்சுக்குள் பிசகாமல் உமது துரோகங்களும் பொருந்தும்,
பணத்துக்கு இனத்தை விற்ப்பவனின் வாழ்வுக்கு, மனித சந்தோசத்தின் நிழல் அவன் ஆயுளுக்கு இல்லை. இதை உன்மரணத்தின் மடியிலாவது நீர் உணர்ந்தே ஆகவேண்டும்.
Tuesday, 31 July 2007
புலிஎதிர்ப்பை புல்லரிக்க வைக்கும் ரயாகரனுக்கு வணக்கம்!
இந்தியத்தின் அராயகம் ஈழத்தில் ஜென்மாந்திர சிறைவாச தோசம் கொண்டவர்களை அள்ளி எடுத்து, தமிழர்களுக்கு அரசியல் போதிமரங்களாக ஆக்க முயற்சி எடுத்தது.
அந்த முயற்சியில் வேர்விட்டதா இந்த ரயாகரம்?
தமிழீழம் என்ற சிந்தனையை தன் பகைகளில் ஒன்றாக கருதக் தக்க சக்தியின் அதன் கொள்கைகளால் கற்பம் தரிக்கப் பட்ட போராட்ட
முன்னாள் போராளிக் குழுக்களின் போராட்ட அகாலமரணங்களுக்கு நினைவஞ்சலி பாடவந்த கவியோ?
காலம் காணாத எம்மண்ணின் கல்வி அறிவோ?
பெரும்பான்மையின் விருப்பத்துக்கு பாதை அமைப்பதே பகுத்தறிவின் சட்டம்.
எங்கே உங்கள் வாதம் பெரும்பான்மைக் குரலுக்கு சொந்தம் என்று சொல்ல செயல்களால் முடியுமா?
வாய்வார்த்தைக்கு "குளத்தைக் கடல்" என்றும் சொல்ல முடியும்,
சந்திரிக்கா கூட "தமிழ் மக்கள் என்பக்கம் தான்" என்றும் சொல்ல முடியும்.
பகுத்தறிவு என்றால் என்ன? லங்காபுவத்திடம் அறிவை இரவல் வாங்கி புலிப்பலத்தை நகையாடுவதா?
ஜந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் புதுமுகங்களுக்கு, புதுக்கதைகள் சொல்லுகின்றமை வழமை. அடுத ஆட்சியில் அவர்கள் குட்டிச்சுவரில் காதிதம் தான் தின்று கொண்டிருப்பார்கள் என்பதும் சிங்கள அரசியலின் பரப்பரைத்தோசம்.
இதேபாணியிலேயே தாங்கள் கூட கரைந்து கொண்டிருப்பது பற்களே தேயும் வரைக்குமா? என்ற சலிப்பேதும் வருவதில்லையா?
புலத்திலே புலிஆதரவு கடல் போல் திரண்டு காலத்துக்கு உண்மையைக் காட்டுவது போல்,
எங்கே சிறு குட்டை அளவுக்காவது திரள உங்கள் கருத்துக்களுக்கு கூட்டம் உண்டா?
இல்லை பகுத்தறிவுத் திரவியம் பொங்கிவளியும் ஒரே நிறைகுடம் நீங்கள் தானா எமக்குள்?
சுவையை அறிவிக்கும் உணர்வுகள் நாவில் செத்த பிறகு ஒருவன் உணவு உண்பது அவன் உடம்பின் வாழ்வுக்கு மட்டும்தான்.
அவ்வாறே சில யென்மங்களின் பணப்பேராசை இவர்கள் மனித உணர்வுகளை சாவடித்து விடுகிறது, எங்கே உங்கள் அறியாமைக்கு கொஞ்சமாவது வெளிச்சம் காட்ட நாம் ஆசைப் படுகின்றோம் ரயாகரன்.
கண்களை விற்று சித்திரம் வாங்க ஆசைப் படாதீர்கள்!
Saturday, 14 July 2007
நோய்ப் பிரியன் பக்கத்தில் புத்தகங்கள் பார்த்தேன்!
ரயாகரனிசத்தின் புத்திக்கு அது ஒன்றேதான் சுகத்துக்கு மிச்சமாய் இருப்பது வருந்தத் தக்கதே!
ஈழத்து மக்களின் துன்பங்களுக்கு யார் உண்மையான பாதுகாவலன்?
புலிகளா? இல்லையே அந்த பாசிசவாதம்தானே அதன் நோய் மூலமே!
சிங்களவாதமா? விபச்சார அரசியலின் கூத்தாடிகள் அல்லவா அவர்கள்!
சிங்கள அரசின் தத்தெடுப்பு தமிழ் குழுக்களா? வீட்டைக் கொழுத்தும் அரசவாதத்துக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் பிசாசுகள் அல்லவா அவர்கள்?
அப்படி என்றால் இவர் தயாரிக்கும் திரைப்படக் கதையின் நாயகனுக்கு இவர் கற்பனையைப் பிழிந்துதான் உருவம் படைக்க வேண்டுமா?
அனைத்து தரப்பையும் வில்லன்களாகவே பார்க்கின்றார் என்றால்,
புலிஎன்ற வில்லன்கள் குறித்து, அரசு என்ற வில்லன்கள் கழிந்து விடுகின்ற அண்டப் புளுகுகளை எல்லாம், முழங்காலை முட்டுவைத்து முழம்நாக்கால் நக்கி எடுத்து அவற்றை அக்கறை யோடு தனது செய்திச் சேவையில் முழங்குகிறாரே!
தழிழர்தரப்பின் உரிமைகளை, சிங்களதரப்பின் அதிகாரம் கை நழுவவிடாமல் இருப்பதன் காரணம், புலிகளின் பயங்கரவாதப் போக்குத்தான் என்றால், அது மாற்றுக் குறையாத பைத்தியக் காறத்தனத்தின் பேச்சல்லவா?
புலிக்காச்சலில் சிங்களவாதம் புலிஎதிர்ப்பாய் என்னத்தை பிதற்றிக் கொண்டிருக்கின்றதோ,
அதன் தராதரத்திலேயே ரயாகரனின் பிதற்றல்களும் சமமாய் உக்காருவதால், இவர் வாயாலேயே சிங்கள வாதத்தை இளக்காரம் பண்ணிக்கொண்டு எப்படி புலி எதிர்ப்புக்கு கனவு காண மட்டும் அவர்கள் சிந்தனையையே இரவல் வாங்கலாம். இதுதான் முதிர்ச்சி உடைய பகுத்தறிவா?
இல்லை இகழ்ச்சிக்கு பயந்த பிழைப்புவாதமா?
பெரும் படைபலம் கொண்ட வல்லரசாலேயே, கிள்ளி எறிய முடியாத போராட்டம் என்றால் அது மக்கள் ஆதரவு என்ற வேரில் இல்லாமலா இருந்திருக்கும்.
"மக்கள் ஆதரவு புலிகளுக்கு இல்லை."
"புலிகள் ஆயுதங்களைப் போட்டால் அவர்களை, அவர்களின் முன்னாளின் வவ்வால் பாவங்கள் எல்லாம் பழிதீர்க்க கிழம்பிவிடும்"
இப்படி தினமின பொறாமைப் படும்படி கனவுகாணுவது,
அதிமேதாவித்தனத்தின் ஞானப்பார்வையினாலா? இல்லை புலித்துவேசத்தின் பித்தப்பார்வையினாலா?
இந்தப் பித்தப்பார்வையை வைத்து புத்தகம் வேறு எழுதுகிறாரம்.
முதலில் உங்கள் பார்வையைக் குணப்படுத்த வழியைப் பாருங்கள், விடுத்து எங்கள் பார்வைக்கும் காமாளையைத் தர ஆசைப் படாதீர்கள்.
Wednesday, 27 June 2007
காட்டிக்கொடுப்பின் கண்கட்டி வித்தை!
மக்களையா? சிங்களஇனவாதத்தையா?
ஒரு கோடு பெரிதோ, சிறிதோ ஆக்குவதற்க்கு தேவைப்படப் போவது இன்னொரு கோடே! எனவே நன்மையாலோ, இல்லை தீமையாலோ புலி என்ற கோட்டை பெரிதோ, சிறிதோ ஆக்குவதற்க்கு அந்த இன்னொரு கோடு எங்கே?
உங்கள் கொள்கைகளுக்கு நேர்மை இருந்தால், இன அவலத்துக்கு நிரந்தரமான தீர்வொன்று உங்களால் இனங்காட்டப் பட்டாமலே, புலிதான் மக்களின் துன்பம் என்று முறையிடுவது பொருத்தமாகுமா?
பிறந்த குழந்தைக்கே மரணத்தை தீர்ப்பாய் எழுதும் சிங்களந்தின் இனவாதக் கொடுமையை விட்டு விட்டு. பேச்சுரிமை புலிகளால் மறுக்கப் படுகிறது என்னும் குற்றச்சாட்டுக்குத்தான் அவசர நீதிவேண்டிக் கிடக்கிறதா?
புலிஎதிர்ப்பும் சிங்களத்தை வசை பாடுவது தம் இரகசிய தொடுப்புக்கள் வெளியால் தெரிவதை மறைக்கின்ற நடவடிக்கைதான். இல்லை நீங்கள் புதிதயாய் வசைபாடித்தான் சிங்கள எதிர்ப்புக்கு தமிழரில் கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற நிலைதான் உள்ளதா?
உங்கள் சிங்களவசைபாடலின் பயன் சிங்களத்துக்கு புதிதாய் ஒன்றும் ஆக்கப் போவதில்லை. பதிலுக்கு நன்மை மட்டு உண்டு, அவர்களின் கூலிகள் என்ற நிலையில் புலித்துவேசம் மக்களிடம் விலைப்படுவதைக் காட்டிலும், அரசியல் தொடர்புசார்பிலாக் கருத்து என்ற வேடம் கிடைத்து விடும். அல்லவா உன்கள் புலம்பல்களுக்கு. இதனால் தானே ஒவ்வொரு துரோகக்கூட்டமும் மற்ற துரோகக் கூட்டத்தை சிங்களத்தின் அடிவருடிகளாக முழங்க வேண்டிய தேவை வேறு இருக்கிறது.
தமிழ்வட்டம் தமிழர்களுக்கு விடுகிறது பட்டம்.
எழுத்து சோத்துக்கே என்றாலும் சொல்ல பேருக்கு ஜனனாயகம்.
85 நாட்கள் வவ்வால் பிழைப்புக்கு வஞ்சம் தீர்கக ஜனனாயகம் என்ற வேசம் ஒன்றுதான் கிடைத்ததா?
செஞ்சோலைச் சிறார்களின் மரணத்தில் உலகே வாய் அடைத்து நிற்க்க, புலிஎதிர்ப்புக்கு கதை, வசனம் எழுதிய உங்கள் அயோக்கியபுத்தியை நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.
கருத்தால் புலியை வெல்ல வக்கு இருந்தால் வேண்டுமா? பினாமி, சுனாமி பாஸிசம், புலியிசம்.
