Friday 10 October 2008

உலகத்தமிழனின் திருநாள் இதுதான் அல்லவா?

தமிழீழம் பிரசவிக்கும் திருநாளும்,
எம்தாய்க்கொடி உறவுகள் எமை அணைக்கும் திருநாளும் -வரலாற்றில்
தமிழர் மகிழ்ச்சிக்கடல் பொங்கி எழவைத்த பொன்நாட்க்கள்
செய்தியாய் வரும் தமிழ்நாட்டு எழுச்சியிலே
எம்மண் பட்ட மரங்களில்கூட புத்துயிர் துளிர்க்கின்றது.
உடைந்து கற்குவியலான மாடங்களில் கூட
தெரிகின்றது மீள் புத்தமைப்பிற்க்கான தவிப்பு,
செங்குருதி நீர்பாய்ச்சி நாம் வளர்த்த உரிமைப்பயிர்
சூரிய உதயதயம் அதை உறவாய்க் கொண்டு விட்டது
உலகமே நீ இனி ஒன்றாய் வரினும் உன் பகைக்கு நாம் இனி அஞ்சமாட்டோம்!

No comments: