Tuesday 31 July 2007

புலிஎதிர்ப்பை புல்லரிக்க வைக்கும் ரயாகரனுக்கு வணக்கம்!

புலிஎதிர்ப்பை புல்லரிக்கவைக்கும் ரயாகரனுக்கு வணக்கம்!
இந்தியத்தின் அராயகம் ஈழத்தில் ஜென்மாந்திர சிறைவாச தோசம் கொண்டவர்களை அள்ளி எடுத்து, தமிழர்களுக்கு அரசியல் போதிமரங்களாக ஆக்க முயற்சி எடுத்தது.
அந்த முயற்சியில் வேர்விட்டதா இந்த ரயாகரம்?
தமிழீழம் என்ற சிந்தனையை தன் பகைகளில் ஒன்றாக கருதக் தக்க சக்தியின் அதன் கொள்கைகளால் கற்பம் தரிக்கப் பட்ட போராட்ட
முன்னாள் போராளிக் குழுக்களின் போராட்ட அகாலமரணங்களுக்கு நினைவஞ்சலி பாடவந்த கவியோ?
காலம் காணாத எம்மண்ணின் கல்வி அறிவோ?
பெரும்பான்மையின் விருப்பத்துக்கு பாதை அமைப்பதே பகுத்தறிவின் சட்டம்.
எங்கே உங்கள் வாதம் பெரும்பான்மைக் குரலுக்கு சொந்தம் என்று சொல்ல செயல்களால் முடியுமா?
வாய்வார்த்தைக்கு "குளத்தைக் கடல்" என்றும் சொல்ல முடியும்,
சந்திரிக்கா கூட "தமிழ் மக்கள் என்பக்கம் தான்" என்றும் சொல்ல முடியும்.
பகுத்தறிவு என்றால் என்ன? லங்காபுவத்திடம் அறிவை இரவல் வாங்கி புலிப்பலத்தை நகையாடுவதா?
ஜந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் புதுமுகங்களுக்கு, புதுக்கதைகள் சொல்லுகின்றமை வழமை. அடுத ஆட்சியில் அவர்கள் குட்டிச்சுவரில் காதிதம் தான் தின்று கொண்டிருப்பார்கள் என்பதும் சிங்கள அரசியலின் பரப்பரைத்தோசம்.
இதேபாணியிலேயே தாங்கள் கூட கரைந்து கொண்டிருப்பது பற்களே தேயும் வரைக்குமா? என்ற சலிப்பேதும் வருவதில்லையா?
புலத்திலே புலிஆதரவு கடல் போல் திரண்டு காலத்துக்கு உண்மையைக் காட்டுவது போல்,
எங்கே சிறு குட்டை அளவுக்காவது திரள உங்கள் கருத்துக்களுக்கு கூட்டம் உண்டா?
இல்லை பகுத்தறிவுத் திரவியம் பொங்கிவளியும் ஒரே நிறைகுடம் நீங்கள் தானா எமக்குள்?
சுவையை அறிவிக்கும் உணர்வுகள் நாவில் செத்த பிறகு ஒருவன் உணவு உண்பது அவன் உடம்பின் வாழ்வுக்கு மட்டும்தான்.
அவ்வாறே சில யென்மங்களின் பணப்பேராசை இவர்கள் மனித உணர்வுகளை சாவடித்து விடுகிறது, எங்கே உங்கள் அறியாமைக்கு கொஞ்சமாவது வெளிச்சம் காட்ட நாம் ஆசைப் படுகின்றோம் ரயாகரன்.
கண்களை விற்று சித்திரம் வாங்க ஆசைப் படாதீர்கள்!

No comments: