Thursday 6 August 2009

பரிசின் பரிசை வாங்கினார் கலைஞ்ஞர்.

திமுக கட்சியின் மாபெரும் கூட்டம் ஒன்று நடக்கின்றது,
விண்முட்டும் மக்கள் கரவோசத்தின் மத்தியில்,
கலைஞ்ஞர் பேசிக் கொண்டிருக்கின்றார்,
“அண்ணாவின் அன்புக்கரத்தால் நான் பரிசாக வாங்கிய இந்த வெள்ளி வாள்தான் என் கனவு இலட்சியம் என்று நினைக்கின்றீர்களா? இல்லை நிட்சயமாக இது இல்லை. “அடப்பாதகா! பொன் வாளா பேண்டும் என்று கேட்கின்றாய்” என்று சலித்துக் கொள்ளாதீர்கள்?
நான் பரிசாக நினைத்தது, அண்ணா விரல் காட்டும் இலட்சிய மலரைப் பறிக்க அதில் நான் போர்வீரனாகி அதில் வரும் சாவு வேண்டும்.
அபோது அண்ணாவின் மடியில் என் தலை கிடக்க அந்த இமயமலையின் விழிகளில் இருந்து வடிந்து வரும் கண்ணீர் முத்துக்களை என் முகம் ஏந்த வேண்டும்.
அது ஒன்றுதான் என் இதயம் சுமந்து வைத்திருக்கும் பேராசை”.
கரவோச முழக்கங்கள் வானைப் பிழக்கின்றன்.

காட்சி இரண்டு.
இதுவும் திமுகவின் மாபெரும் கூட்டம் ஒன்று, வளமையன கட்சி விடயம் சார்ந்த நிகழ்வுகளே நடந்து கொண்டிருக்கின்றது. ( அன்றைய காலப் பகுதியில் அண்ணாவிற்கு கீழ் உள்ளவர்கள், கட்சியின் மூத்த நிலை என்று சொல்லப்படத் தக்கவர்கள் அனைவரும் கருணாநிதி, கண்ணதாஸன் உட்பட பலரும் கட்சியின் சம முக்கியத்துவத்துடன் இருந்தார்கள்.)
அரங்கத்தின் உள்ப்பகுதியில் அண்ணாவுடன் கலைஞ்ஞர் உரையாடிக் கொண்டிருக்கின்றார்,
தனது கையில் இருந்த கணையாழியை அண்ணாவிடம் கொடுத்து, “அண்ணா இதை மேடையில் வைத்து எனக்கு அணிந்து விடுங்கள்” எனக்கேட்கின்றார். அப்போது அண்ணா என்ன நினைத்திருப்பார்?
“அன்று நான் பரிசாகத் தரும் பாசக் கண்ணீருக்காய் சாவைக்கூட ஏற்பது சுகம் எனச்சொன்னாய், என் நெஞ்சமெலாம் இனித்தது, ஆனால் இன்று,,,,,,,,
மயிர் நீர்ப்பின் உயிர் வாளாது கவரிமான் என்பார்கள், ஆனால்
மயிர் காக்க மானம் விக்கும் கவரிமான் ஆனாயே நீ.
சாக்கடை ஒன்றை பார்த்து விட்டேன் என்று அல்ல நான் அருவருபப்டைவது,
பசும்பால் என்று அதை அளந்த என் அறிவு, அதை நான் எதனால் அடிப்பது” என்று வருந்தியிருக்காரோ.

No comments: