Tuesday 23 October 2007

புறநானூறின் இலக்கிய நயம் பிச்சை எடுக்கவேண்டும்!

என்வாசிப்பு பழக்கத்தின் ஞாபகப் பதிவுகளில் இருந்து,,,,
புறநானூறில் இலக்கிய நயத்தின் சாரல் ஒன்றில் இருந்து,
பண்டைத்தமிழ் மன்னன் ஒருவனின் காலாட் படை ஒன்று களமுனை நோக்கி நகர்கிறது, நெடிய காடுபோல் நகரும் அந்த சேனை ஒரு பனந்தோப்பு ஒன்றை அதன் துவக்கம் சந்திக்கும் போது அந்த தோப்புக்கு நொங்குக்காலம் எனவே நொங்கைக் குடித்து களிக்கின்றது சேனை.
அப்படியே கடந்து கொண்டிருக்கும் சேனையின் முடிவுப்பகுதி இந்த் தோப்பை அடைய பனங்கிழங்குக் காலம் தொடங்கி விடுகிறது அவர்களோ பனங்கிழங்கை சுட்டு தின்று மகிழ்கிறார்கள் என அமைகிறது அந்தப்பாடல் எவளவு அழகாக படையின் பிரமாண்டத்தை இலக்கிய நயம் சொட்டச் சொட்
ட சொல்லப் பட்டிருக்கிறது.
ஆனால் இன்று சிங்கள அரசுகள் கையாளும் இலக்கிய நயம் தொட்டுக் கொள்வதற்க்கு புறநானூறூ ஆகுமா என எண்ண வைக்கிறது.
படைவிலகல் மாட்சியை எவளவு அழகாகச் சொல்கிறார்கள் என்று பாருங்கள் படையை விட்டு ஓடுபவர்கள் எவளவுகாலமாக ஒடிக்கொண்டிருக்கிறார்கள் நொங்குக் காலத்தில் இருந்து கிழங்குக்காலம் வரைக்குமா கிழங்குகள் எல்லாம் தோப்புகள் ஆகியும் இப்போதும் ஓடிக் கொண்டேதான் இருக்கிறார்களாம் அப்படி என்றால் உலகின் படைகளை எல்லம் ஒன்றாக்கினாலும் கற்பனையின் கடனை அடைக்குமா அந்த தொகை.
என் சின்ன வயதில் ஒரு நன்பன் சொல்வான் இப்படி வானம் ஒருநாள் தலைக்குமேல் விழப்போகிறது, அதற்க்கு இன்னொருவன் பதிலழிப்பான் விழத்துவங்கினாலும் அது பூமியத்தொட 100 வருடங்களுக்கு மேலாகும் என்று.அதுதான் நினைவுக்கு வருகிறது எனக்கு ஏன் எனில் புலிகள் விலகி ஓட்டத் தீர்மானித்தாலும் அதுவும் முடிவுக்கு வர 30 ஆண்டுகள் அவர்கள் தொகையின் பாதி ஓடிமுடியக் காணாது ஏன் எனில் இதைத்தானே வியஜரட்னா, ரம்புக்கல ஏன் ரயாகரன் வரைக்கும் படித்துப் படித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பாவம் இந்தப் பாணர்களின் இயலாமை இலக்கிய நயமும் எமக்கு சுவையாகத்தான் இருக்கிறது.

1 comment:

Bee'morgan said...

நல்ல உவமை..