Monday 19 November 2007

பயங்கரவாதத்தின் புதிய இலக்கணமா?

உலகபாதகங்கள் அனைத்தும்
மண்ணில் கொடிபடர - அவற்றின்
முழுமுதல் குறிக்கோளாக இருப்பது
பணமே!
வேசம் போட்ட இராசாவேசத்தை வெளிப்படுத்தும்,
உண்மை சூழ்நிலை நேர் எதிர்க்கும் போது.
புலி இரத்ததின் பரிசோதனை முடிவு பயங்கரவாதமாம்!
புலி இரத்தத்தின் நோய்க்கு காச்சல் காய்வது.
இந்தியாவுக்கும், சிங்களத்துக்கும், பிராந்தியவாத சக்திகளுக்குமாம்!
ஏன் தமிழீழம் மட்டும் தடுப்பூசியா போட்டுள்ளதா?
உலகம் பூராகவும் பரந்துவாழும் ஈழத்தமிழர்களுமா தடுப்பூசி போட்டுள்ளார்கள்?
புலிகள் கொள்கையே! இந்திதுவத்தின் உண்மையான பகை என்றால்
யதார்த்தம் நம்ப அதில் உண்மை இருக்கின்றது.
அவர்கள் பயங்கரவாதம் தான் இவர்களின் பகை என்றால்
அது பயங்கரவாதம் தானா என்பதை,
காலம் தன் அநுபவத்தை உரைத்து உண்மை அறியாதோ?
இன்றுவரை இரு அரசுகளும் புலிஎதிர் போருக்கு
கொடுத்த மொத்த தெட்சனைகள் (உயிர்கள் தவிர்த்து)
ஒவ்வொரு புலி உறுப்பினருக்கும் சமமாக பகிர்ந்தால்
உலகவரிசையில் இருக்கும் செல்வந்தர் தரத்துக்கு
அவர்கள் வாழ்கையை வைப்பிக்க முடியும்
புலிகள் இதற்க்கு இசைவாகளே என்றால்,
அவர் காலில் வீழ்ந்து இதைக் கொடுக்கவும்
இந்த அரசுகளும் முண்டி அடிக்கும்.
அந்த அற்புதமான எதிர்காலம்,
வாசல் திறந்துவைத்து காத்திருக்கும் போதும்.
குருதி நனைந்த நிலத்தில் உறுதி சுமந்து நிற்பதுதான்
பயங்கரவாதத்தின் புதிய இலக்கணமா?

No comments: