Sunday 18 January 2009

திருமாவின் தவம் வேண்டாமே ஈழத்திற்க்கு!

சாவிழிம்பில் வாழ் இனத்தின்

இழவில் கட்சிப்போட்டி அரசியல் செய்கின்ற

தாய்த்தமிழ் நாட்டில் வாழ் திருமா,

ஊர் உலைவைத்து உண்ணி அரசியலர் முன்னே,

உன்னைத் தொலையவைத்து உண்ணும் ஈழத்தை அநாதையாக்காதே,


பசியில் உன்னுயிர் வாடுகின்ற கொடுமை

சிங்களவன் குண்டு எம்தலையைப் பிடுங்குவதைவிட வலிக்கின்றது,

நேசம் வைத்த பாவத்திற்க்கு சிலுவை நீ சுமப்பது எமக்கு பிடிக்கவில்லை,

எம்மினம் மொத்தத்திற்க்கும் நாசமே வந்தாலும், முடிகின்ற போதும்,

உன்கண்ணீரையே எம் இதயத்தால் சுமக்க முடியவில்லை,


எம் வேண்டுதல் அரச அதிகாரம் கொண்டு வரவில்லை உன்னிடம்

பிள்ளையின் பாசம் தாயிடம் வரும் உரிமையோடு வருகின்றது,

வேண்டாம் உங்கள் பசித்தவம் தீயில் எரிகின்றோம் உணர்வால்,

நீ வாழவேண்டும் என்று ஈழத்தின் சுயநலம் பிச்சை கேட்கின்றது உன்னிடம்.


No comments: