Sunday 9 December 2007

பிழைப்புவாததுக்கு சிங்களவாததின் கள்ளதொடர்பில் பிறந்ததுதான் புலிஎதிர்ப்புவாதம்!

சகபோராளி அமைப்புக்களின் பிழைப்பனவு மீது புலிச்சூறாவளி அடிக்க இருக்கின்ற காலம் அது.
TELO என்னும் அமைப்பே முதல் அடிவாங்கும் பாய்கியத்தைப் பெறுகின்றது.
அந்த இரவின் நடுப்பகுதி என்றும் இல்லாத ஒரு நாளாக இருந்தது. துப்பாக்கிகளின் வெடி ஓசைகள் தேசமடங்க சீறிக் கொண்டிருந்தது. பலருக்கு என்ன நடக்கின்றது என்று ஒன்றுமே புரியவில்லை. விடிந்த பிறகுதான் அது புலி இடிமுழக்கம் என்றும், அவை TELO பாசறைகள் மீது வீழ்ந்திருக்கின்றது, என்ற செய்தியும் அறிகின்றனர் மக்கள்.
இந்த இடிமுழக்கம் மக்கள் மனங்களில் சந்தோசப் பொங்கல் பொங்கியது என்பதுதான் உண்மை. ஏன் எனில் சிலமாதங்கள் முன்னதாகதான் இரண்டு துண்டாக அந்த அமைப்பு உடைந்து அணிமோதலின் உச்ச பச்சமாக உலகவரலாறே காறிதுப்புமளவுக்கு மிக கேவலமாக, நயவஞ்சகமாக மறுஅணியின் தளபதிகளை கொன்று குவித்தது.
அமைப்பின் தலைவர் சிறீசபாரத்தினம், உடைந்த இரு அணிகளின் தளபதிகள் போபி, தாஸ் என்பவர்களே ஆகும்.
பொபி சபாரத்தினத்தின் நெருங்கிய உறவு, கருத்தால் முரண்டுபிடித்த தாஸ் அணியை வேரோடு களைய சதியில் இறங்குகிறார்கள். இந்த அணியினர்.
சதி கத்தி தீட்ட துவங்கியது,
திட்டம் தயாராகியது.
சதி பிதாக்களால் நாடகம் ஒன்று மேடை ஏற்றப்படுகிறது.
யாழ்வைத்திய சாலையின் நோயாளர் பகுதி மேடை ஆக்கப்பட்டது.
நாடகம் சிறிசபாரத்தினம் சுகயீனமாய் படுத்திருக்கின்றார்.
தகவல் மறுஅணிதலமைக்கு அனுப்பப்படுகிறது “யாழ்வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் தாஸ் உடன் பேச ஆசைப படுகின்றாராம்” அவர்களிடையே இருந்த முரண்பாடு ஒரு பிஞ்சு நிலை விவகாரமாகவே இருந்தமையினால் இவர்களுக்கு சந்தேகம் துளிர்விடவே இல்லை. சாதாரண ஒரு பயணமாகவே அவர்களுக்கு அது விளங்கியது, யாழ்வைத்தியசாலைக்கு மேல்மட்ட உறுப்பினர்களுடன் தாஸ் பயணம் வெளிக்கிட்டார்.
வடமராட்சியை கோட்டையாக கொண்ட இந்த அமைப்பு போபியின் கோட்டையான யாழ்பாணம் ஊடாக பயணம் செய்தது யாழ்வைத்தியசாலையை அடைகின்றார்கள், வாயிலில் இருந்த பொபி அமைப்பினர் மென்மையாக அறிவுரை சொல்லுகின்றார்கள். “வைத்தியசாலையுள் ஆயுதம் தரிப்பது அழகில்லை" என்று, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டமுகமாக ஆயுதங்களைக் கைமாறுகின்றார்கள், சபாரத்தினத்தை நோக்கி பயணம் மேலும் தொடர்கின்றது. சபாரத்தினத்தின் வாட்டுக்குள் நுளைகின்றார்கள், நோயாளி வேசத்தில் அவரும் அவர் சகாக்களும் மறைந்த துப்பாக்கிகளுடன் வைத்தியசாலைக்குரிய சூழலை ஒருநிமிடம் அழகாக ஒப்புவிக்கிறார்கள்.
பின்னால் ஒழிந்திருந்த துப்பாக்கிகளின் விசை முதுகு குறிக்காக காத்க்துகிடக்கின்றது, வலைக்குள் விழ்கின்றது இந்த அப்பாவிப் பறவைகள். நிராயுதபாணியாக நின்ற அந்த தளபதிகளை ஆயுததாரிகளான அவர்களால் கைது கூட பண்ணகூடிய தைரியம் இருக்கவில்லை அவர்களிடம். இவர்கள் எப்படிப் பட்ட துடை நடுங்கிகளாக இருந்திருக்க முடியும். வைத்தியசாலை ஒரு ரணகளமாகிக் கிடந்தது. சிலநொடிகளில் அனைவரும் இரத்த வெள்ளத்துக்குள், வைதியசாலை தாதி ஊழியர்கள் உட்பட.
எபடி இருக்கின்றது இந்த போர்? முதல் கட்டம் நிராயுதபாணிகள்.
இரண்டாவது முதுகுக்கு பின்னாலிருந்து சூடுகள்.
வைத்தியசாலையுள், இயலாமை என்ற வேசம் பரிதாப்பட்டவனின் முதுகைக் கேட்கிறது!
உலகின் கோழைத்தனங்களை ஒன்றாக்கினாலும் இவர்கோழைத்தனங்களை மிஞ்சவருமா?
கோழைநோய் ஒருவனின் பீழைப்புத்தியை காட்டிக்கொடுக்கும் இயற்கையின் வியாதி!
இதுடன் அவர்கள் கேவலவரலாற்றின் கதை முடியவில்லை, இதை அறிந்து மக்கள் வெள்ளம் திரண்டு அவர்கள் முகாம்களை சூழ்ந்து கோசங்களால் அறைந்தனர் இந்த கொடியவர்களின் கன்னதில்.
சப்பிகளின் இந்த போராட்டதுக்கு துப்பாக்கிகளின் பாசைகளை அன்றி வேறு என்னத்தைதான் அறிவார்கள்?
மீண்டும் அதே பாணியில் அவர்கள் துப்பாக்கிகள் பேசத்துவங்கியது சரிந்தன அப்பாவிகளின் உடம்புகள், ஏனயவை நிலைதெரியாது தம் கால்கள் போனபாட்டில் ஓட்டம் எடுத்தன, இப்படி மக்கள் மனங்களில் மறக்க முடியாத ஒரு இடத்தை பிடித்த அமைப்புக்கு விழுந்த அடிதான் புலிகள் மக்களுக்கு கொடுத்த தமிழீழத்தின் பூர்வாங்க பரிசு என்றால் தவறாகுமா?
இப்படியேதான் ஏனய போராட்டங்களும் தமக்கென ஒரு நல்ல பேரை மக்களிடம் எடுத்த பிறகுதான், புலிச்சூறாவளி வேரோடு பிய்த்தெறிந்தது அவர்கள் கூடாரங்களை.
இவை துப்பாக்கி பலத்தில் வளமாய் இருந்த அமைப்புக்கள்தான் கொஞ்சம் எதிர்ப்புக் காட்டின ஏனய குஞ்சு அமைக்குககள் பலவும் இருந்தது. அவைக்கு பசைக்கும் பேப்பருக்கும் தான் வசதிகள் இருந்தன ஏனவே பசை ஈரத்தை தம் சட்டைகளில் பிரட்டி, காயவைத்து அவர்கள் மக்களோடு மக்களாகி விட்டனர். புலிப் போரின் நோக்கம் முடிந்தவரை இரத்தம் சிந்தாமல் அமைப்புக்களை கலைப்பதே என்பதால், ஒரு திசையில் இருந்தே தாக்குதலை கொடுத்தார்கள் எனவே 95% உறுப்பினர்கள் ஓட்டம் எடுக்க வசதியை ஏற்படுத்தி கொடுத்திருந்தது. சூழ்நிலை சிக்கலில் மாட்டுபட்டு ஓட மறுத்தவர்கள் மாண்டார்கள்.
அன்றைய காலகட்டதில் புலிகளின் ஒட்டு மொத்த தொகையே வெறும் ஆயிரத்தை தொட்டிருப்பது மிக அருமையாய் இருந்திருக்கும். எனவே இந்த சூறாவழியின் சேதாரம் என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாக்கலாம்.
இந்த சக அமைப்புக்களின் கருஅறுப்பு சூறாவளி எம்முறத்திலேயே வீசியதனால்தான் அதன் நன்மைதீமை உணர்ந்த எம்மால் புலிகளின் மேல் குற்றம் பாராட்ட முடியவில்லை. தூரத்து உறவுகளுக்கு இந்தக்கதை சிங்களவாததாலும் அவன் அடிவருடிகளாலும் தலைகால்கள் வைத்து சோடித்து காண்பிக்கப் படுகின்றது.

“மக்கள் என்பக்கம்” என்று சொல்கிறார்கள் இவர்கள்!
சங்கரியார்
கருணா.
பிள்ளையான்
டக்ளஸ்.
மகிந்தா.
சந்திரிகா.
சிறீரங்கன்.
ரயாகரன்.
எனவே மக்கள் என்ற தோல் போர்த்துகின்ற எல்லாமே சிங்களவாததின் குட்டிப் பூதங்களே. இவை ஒவ்வொன்றின் செயல்வாதங்களும் தமிழன் முதுகில் செருவும் கத்திகளே!

ஊர் அறிய செத்துபோய் விட்டவன் உடம்புக்கு, தலை என்றும், கால் என்றும் சோடித்தல், உயிரை தருவிக்காது என்ற உண்மை குழந்தையின் புத்திக்கே வெளிக்கும்.
வெறும் வாய்சப்பி வயிறு நிரம்பாது, இதையேதான் ரயாகரனின் எழுத்துவாதம் தலைகீழாய் நின்று வெறும் பல்லைச் சப்பிக் கொண்டிருக்கின்றது.
ரயாகரனிசத்தின் புலம்பல்கள் எல்லாம் புலிக்காச்சல் மெத்தி வரும் சன்னி என்று எடுத்துக் கொள்வேம்.

2 comments:

Anonymous said...

didn't ltte sleep with Singalese when IPKF's noose was tightening around Praba's neck????
tamils are famous for political/survival prosititution

தேவன் said...

நண்பரே அற்புதமான அரசியல் அறிவு தங்களுக்கு. எமது இலட்சியபாதையின் குறுக்கே வரும் தடைகளைத்தான் பகை என்று கொள்வோம். இங்கே எவன் வருகிறான் என்பதல்ல தடையாய் எவன் வந்தாலும் அவனே எமது எதிரி. விரலைக் கொடுக்கும் ஏகலைவனாக தமிழன் இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை என நினைக்கின்றேன்.