Friday 14 December 2007

ஜென்மங்கள் செருப்பால் அடித்தாலும் தொலைக்க முடியாத ஈனத்தங்கள்!

விழுந்த பனம்பழம் உண்மையான கதையாகவே இருக்க அதற்க்கு காகத்தை காரணமாக கொண்டு வந்து இருத்துவதுதான், ரயாகரன் பிழைப்புவாத எழுத்தின் உழைப்பாய் இருப்பது.
ரயாகரனிசம் கதை அளக்கின்றது இப்படி,,, “ஈழத்தில் மக்களை காலிசெய்ய வைத்தது, புலிகளின் மேல் கொண்ட வெறுப்பாம்”.

ஈழத்தில் அப்படி புலம் பெயர்ந்த மக்கள்கூடம் தானே புலம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள், அவ்வாறு அந்தந்த நாடுகளில் எழும் புலிஆதரவுப் பேர்அலைகளாக இருப்பது இந்த மக்கள் கூடமே அல்லவென்றால், யார்தான் காரணம் என்று சொல்லவருகின்றீர்?
புலி நிர்வாகப்பகுதி வாழ்மக்களில் அன்றாடத் தேவைகள் கூட மறுக்கப்படுவது யாரால்?
எரிபொருள்தடை, மின்சாரத்தடை போன்ற அடிப்படைத் தேவைகளின் தடைக்குள், தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றது தமிழினம்.
இப்படி மக்களின் வாழ்வு; சாவோடு போராடும் சூழலில் வைப்பிப்பது சிங்கள அரசு.
வாழ்வை பிழைக்கவைக்க ஓடும் மக்கள் கூட்டத்தைப் பார்துக் கைதட்டி ஆரவாரம் செய்கின்றார்கள் அரசின் கூலிப்படைக்கள், புலிகள் மேல்கொண்ட வெறுப்பால் ஓடுகின்றார்கள் என்று அர்த்தம் கற்பிக்கப் படுகின்றது இவர்களால்.

இயற்கையின் தடைக்கு பழக்கப்பட்டு இருப்பவர்களிடம், மாவிலாற்றை புலிகள் தடைசெய்தபோது, அந்த சிறிய கிராமத்தின் மனித உரிமை பிரச்சினை என்று சமாதானத்தை உடைக்கும் போருக்கு பேர் சூடினாரகள்.
ஏன் ஐயா? அரசின் மனித உரிமை என்ற அர்தபதம் சிங்களவனை மட்டும்தான் உள்வாங்குகிறதா?
ஏன் என்றால் எமது அடிப்படை உரிமைகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கும் தடைகளுக்காக மட்டுமே, எமது சூழலுக்கு போராடும் உரிமை பல்லாயிரம் மடங்கு பொருத்தம் பூண்டு இருக்கின்றதல்லவா?

தன் தளபதிகளுக்கு எல்லாளனைக் காட்டியமைக்கு புலிக்காச்சல் வாயின் பித்தவுரை இப்படி; தோல்விகளின் சுமையில் மனவாட்டம் கண்ட தளபதிகளுக்கு மன ஊட்டச் சக்தி எல்லாளனாம்.
அதாவது தன் தளபதிகளிடம் தன்மேலான நம்பகத்தன்மையை கட்டி எழுப்புவதற்க்கு திண்டாட்டமான சூழலுக்குள் இன்று பிரபாகரன்.

இந்திய ராணுவம் என்ற புயலில்கூட கலங்காத நம்பகத்தன்மையை. இந்த மகிந்த பரிவாரத்தின் கூச்சல் தொலைக்கப் போகுதாம்.

உமது பித்த உரைக்கும், தினமினவின் கோமாளித்தன உரைக்கும் விதியாசம் மருந்துக்கும் இல்லை.
எல்லாம் இயலாமையின் கயிறு திரிப்புக்களே!
இத்தகைய பிழைப்பனவுகளில் வயறு வளர்க்கும் ஈனப்புத்தி; ஜென்மங்கள் செருப்பால் அடித்தாலும் தொலையாதவையே!

No comments: