Wednesday 30 July 2008

இந்தி(ய)க் கொள்கையும் ஈழமும்!

இந்தியவாதம் தமிழர் இனப்பிரச்சினையை எப்படிக் கையாண்டது?
மனிதாபிமானம் கடைப்பிடிக்கப் பட்டிருக்கின்றதா?
சொந்த தேசநன்மையின் பொருட்டு அடுத்ததேசியத்தின் உணர்வுகள் உதாசீனம் செய்வது உலக அரசியலின் மரபு தானே என்று வாதிடலாம்?
கையாண்ட முறை இந்தியாவுக்கு உரியதாய் அல்லாமல் இந்தி-யாவுக்கு உரியதான இயல்பு தெளிவாகத் தெரிகின்றமைதான் எமது விவாதத்தின் அடிப்படையே!
இந்தியா என்ற அரசியலில் தமிழ்நாட்டின் பங்குக்கு மரியாதை கிடைக்கின்றதா? என்பதே முன்னுரிமை அளித்து விவாதிக்கப் படவேண்டிய விடயம்.
ஈழத்தில் குயறாத்தியோ, இந்திகாறரோ வாழ்ந்திருந்தால்
வாழும் உரிமைக்கு போராடி குற்றுயிராய் கிடக்கும் தன் இனத்தை
அதற்க்கு காரணமான அந்த ஆபத்திடமே கூட்டிக் கொடுக்கும் ஒரு வியாபாரத்தை இந்தியக் கொள்கை என்று இந்த அரசு செய்திருக்குமா?

எனவே இந்த ஈனத்தனத்துக்கு காரணமான இந்திய செயற்பாடுகளை ஒருதமிழனாய் இருந்து ஆதரவாகப் பேசுகின்றான் என்றால் அவன் தமிழ் உணர்வுக்கு சந்ததிப்பகை கொண்ட ஒருவனாய்த்தான் இருக்க வேண்டும்!

No comments: