Sunday 27 July 2008

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள்!


புலி பாசிசத்தின் முடிவும், பேரினவாத பாசிசத்தின் ஆக்கிரமிப்பும்




பி.இரயாகரன் - 2008

Written by பி.இரயாகரன்
Sunday, 27 July 2008 11:46
தமிழ் மக்களுக்கு விடிவு கிடையாது. எந்த சுபீட்சமும் கிடையாது. எந்த நம்பிக்கையும் கிடையாது.
இருண்டு போன பாசிச சூழலுக்குள், மக்கள் மீள மீள அழுத்தப்படுகின்றனர்.

புலிபாசிசத்துக்கு எதிரான வரலாறு, மிக வேகமாக மக்களால் எழுதப்படுகின்றது.
மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் சாகடித்து விட்டு, அவர்களை நடைப்பிணமாக்கியவர்கள்,
அதன் சொந்த விளைவையே தான் அனுபவிக்கின்றனர். முடிவின் (புலிப்பாசிசத்தின்) நாட்கள் எண்ணப்படுகின்றது.


புலிகள் அழிந்துபோவார்கள் என்ற கனவுவானில் மிதப்பவர்கள் எவராவது அந்தக் கனவுக்கு புதிய வரவாக இருந்தால் எமது விளக்கம் அவர்கள் அறிவு நிலைக்கு தேவையாகலாம், அவ்வாறு இல்லாமல் முப்பதுவருடங்களுக்கு மேலாக ஒரேவரியைத் திரும்ப திரும்ப சொல்பவர்களுக்கு அது அவசியமே இல்லை இன்னும் சொல்லபோனால் கனவுப்பைத்தியங்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இழப்புக்களும், பழையநிலைக்கு மீளமுடியாத தோல்விகளும் புலிகள் கொள்கையின் பாதையைத் தீர்மானிப்பவைகளாக இருந்திருந்தால் அது பாரதப்படையின் காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் ஏன் எனில் அப்போதுதான் தமது ஆட்சியில் சிறுநிலமும் இல்லாமல் காட்டில் மறைந்து வாழ்தல் கதியாக இருந்தது.
அந்த நிலையில் கூட கொண்ட கொள்கையின் மாற்று குறையாமல் காப்பாற்றிய புலிகளுக்கு வாயை அன்றி வேறு ஒன்றுக்கும் வக்கில்லாத நாய்கள் வழி சொல்கிறார்களாம்.
கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டார் இரயாகரன் இது சிறுபிள்ளைத்தனமான உபாயம்.
புலிஆதரவை உள்ளங்கையளவாக அளவீடு செய்து கொண்டிருக்கின்றார். எங்கே புலிஎதிர்ப்பு அதைவிட எத்தனை மடங்கு பெரியது அல்ல சிறியது என்று ஆதார பூர்வமாக சொல்ல முடியுமா? இந்த நிலையே அவர் அறிவின் கோளாற்றை வெளிப்படுத்தும் போதிய ஆதாரம்.
தனிமனித தாக்குதல்கள் செய்கின்றோம் என்று முனகிக் கொள்கின்றாராம்!
அவர் இணையபக்க ஆரம்ப காலங்களில் எழித்தறிவு உள்ளவனுக்கு இருக்கும் தராதரத்தைக்கூட மறந்து ஒரு குடிவெறிப் புலம்பலுக்கு இருக்கும் கீழ்த்தரமான வார்த்தைகளை இறைத்தார் தனிப்பட்ட மனிதர்களுக்கு எதிராக உதாரணம் “சாந்தன் அண்ணா பற்றிய விமர்சனத்தில்”

ஒரு தமிழ் ஊடகம் ஒன்றில் சிங்கள அரசுக்கு எதிராக போடும் கூச்சல் அது சிங்களத்தர்புக்கு எந்த மாற்றத்தையும் விளைவிக்க முடியாத ஒரு வினையே ஆகும்.
ஏன் எனில் அது தமிழ்தரப்புக்கு பச்சையாகாத் தெரியும் உண்மை. ஆதலால் இரயாகரன் போன்றோர் சிங்களஅரசுமீது காட்டும் கடும் விமர்சனம் தமது கருத்தியல்நிலையின் நம்பகத்தன்மை இலாபத்துக்காகவே ஆகும்.

சிங்களஅரசின் உண்மையான விரோதம் புலிகள்மீதா?
அவர்களிடம் இருக்கும் தமிழீழ இலட்சியப் பற்றின்மீதா?
இலட்சியத்தை அவர்கள் கை துறக்கத்தாயார் என்றால் சிங்களம் என்ன விலையும் கொடுக்கத் தயார் அவர்தம் உறவுக்கு, எனவே இன்று சிங்களம் தன் சக்திக்கு முடியாத அளவிலும் போரை சுமக்கின்றார்கள் என்றால் புலிகளின் இலட்சியப் பற்றுக்கு கிடைத்த வெற்றியாகும்!
இன்று ஒவ்வொரு சிங்களவனுக்கும் பயங்கரவாதமாகத் தெரிவது புலிகளின் நடைத்தை அல்ல அவர்கள் மண்ணில் கொண்டாடும் நிலஉரிமை.
தமிழீழம் என்ற கனவு எவனுக்கு இருக்கின்றதோ மரணம் அவனுக்கு ஒரு தண்டனையாகத் தகும் இதுவே அவர்களுக்கு இயல்பான எண்ணமாகிறது.
என்வரையின் இரயாகரனின் கும்மாளம் பச்சையாக சிங்கள அரசுக்கு குண்டிகழுவும் செயலேயாகும் இதில் சந்தேகமே இல்லை.
சிங்கள அரசை அச்சம் கொள்ளச் செய்யும் சக்தி புலிகளை அன்றி வேறொன்று இல்லை அப்படி மாற்று சக்திகள் போல் இருப்பவை எல்லாம் புலிகளை அழிக்கும் திட்டத்தின் குட்டித்திட்டங்களாக அரசசக்தியாலேயே உருவாக்கப் பட்டவைதான்.

தமிழ் இனத்தின் அக்கறையில் உதயமான ஒரு சக்திக்கு அந்த இனத்தின் சாவை வியாபாரம் செய்ய முடியுமா?
புலிகளை அழிக்கும் முடிவு இன உரிமையின் விடியலுக்கு வாசல் என்று சொல்கின்ற இவர்கள் ஏன் அந்த உரிமைகளைத்தரும் கதவுகள் புலிகளை வைத்துக் கொண்டே திறக்கக்கூடாதாம்? புலிகள் கண்ணுக்கு முன்னால் ஏன் திறக்கப் பயப்படுகின்றார்களாம்?

No comments: