Monday 29 September 2008

அப்பாவிப் பிணங்களை எண்ணும் போட்டியில் பிராந்திய அரசுகள்!

தேர்தல் ஜனனாயகத்தின் சின்னம்தான் மறுக்கவில்லை,
துப்பாக்கிகளால் வலிந்த பிரசவம் செய்யப் படுகின்ற தேர்தல் முடிவுகளுக்கு பாராட்டுக்களை மூட்டை மூட்டையாக அனுப்பும் இந்த அரசுகள்,
அங்கே முடமாக்கப் பட்ட மனித உரிமைகள் பற்றி வாய்திறப்பார்களா?
அந்த விடுதலை நோக்கிய தவத்தை பயங்கரவாதம் என்று சேறுபூசம் அருகதை உண்டா இவர்களுக்கு!
இதோ பாருங்கள் ஊட்டி ஊட்டி உங்களால் வளர்க்கப்படும் அரசபயங்கரவாதம்,
அதன் பற்றக்ளுக்குள் தொங்கும் பாலகர் உடம்புகளை,
வயதான உடலங்களாய் இருந்திருந்தால் பயங்கரவாதி என்ற ஒரு சொல்லால்
உங்கள் கரவோசத்தை வாங்கிவிடுவார்கள்.
இதற்க்கும் ஒரு பொய்யால் முழங்காலையும் தலையையும் சேர்த்து முடிச்சு போடுவார்கள் ஏன் என்ற கேள்வி இல்லாத இடத்தில் பிழைப்பது அவர்கள் பதில்கள் அல்லவா?
பிராந்திய அரசுகளின் அட்டூளியம் எம்மண்ணில் இதோ பாருங்கள்!





No comments: