Monday 29 September 2008

சம்பூரே சாட்சி!

சிங்கள மண்ணில் மூன்றடி நிலத்தின் நிம்மதியாக ஒன்றுக்கு இருக்குக் உரிமை பறிபோய்விட்டால்கூட ஒரு நாட்டுக்கே வாழ்வுதரும் அமைதியை குலைத்து போர் புரிவது நியாயமானது.
தமிழ் மண்ணின் மொத்தமும் ஒன்றுக்கும் உரிமை இல்லாது அலைந்தாலும் அவர்கள் போரில் குதிப்பது நியாயம் துளியும் இல்லாதது.
இதுதான் சம்பூரில் துவக்கி வைத்த போரின் அறிவிப்பு!
இவை தமிழ் அடிவருடிகளின் அறிவுக்கூர்மைக்கு எட்டாதது.
‘கருத்தாளன் எந்தக் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் கருத்துக்கு இருக்கும் உரிமை மதிக்கப்படுகின்றதாம்’ என்று தேசம்நெற் தனக்குள்ளே சந்தோசப்படுக் கொள்கின்றது.
பரிதாபம் என்னவென்றால் அங்கு பதில் இடுவது அரிவரி வகுப்பினரே என்பதால் விசயஞானம் தூக்கலானவை நீக்கப்பட்டுவிடும்.
சத்தியக்கடுதாசி முகப்புக் குறள் ‘அதிகாரத்தை நோக்கி உண்மை பேசுவோம்!’
இது செயலுக்கு சம்பந்தமில்லாக் குறள், அப்படி சம்பதந்தமானது இந்தக் குறள்தான்
‘தாயே என்றாலும் பணம் தந்தால் வேசி என்று பழிப்போம்!’
என்ன சத்தியக் கடுதாசி இக்குறளை மாற்றும் என்று நம்பலாமா?
அடுத்து இரயாகரன்;
ஒவ்வொரு பதில்களுக்கும் கேள்வி என்ற ஒன்று இருக்கின்றது என்பதை அறியாத ஒன்று. செகிடு விசரில் புலம்புவதை ஒத்தது.
ஐயா உண்மை மருந்தளவுதான் உங்களிடம் இருந்தால் கூட விவாதத்திற்க்கு உங்களை இந்தளவு தொலைவில் ஒளித்துவைத்திருக்க வேண்டிய அவசியம்தான் வருமா?

No comments: