Thursday 16 October 2008

அம்மாவின் சும்மாத்தன அரசியல் என்பது இதுதான்!

ஒரு அப்பாவியை கொலை வெறியுடன் ஒருவன் தக்குதல் செய்துகொண்டு இருக்கின்றான், இவ்வேளை இன்னொருவன் தாக்குதளாளிக்கு ஆயுதம் தருகின்றான், வேறொருவன் அந்த தாக்குதலை நிறுத்த வருகின்றான்.
நியாயம் பேசவென்று இன்னொரு குரலும் அங்கே சேருகின்றது,
ஆயுதம் வளங்கியதை குற்றம் என்று என்ன அடிப்படையில் குற்றம் காண்கின்றதோ அதே அடிப்படை சமரை நிறுத்தியதும் நியாயம் என்று காணும் அல்லவா?
ஆனால் அப்படி இல்லாமல் இருவரையும் குற்றவாளிக் கூண்டி ஏற்றுகின்றது இந்த நியாயத்தின் குரல் இதுதான் வெற்றுத் தோட்டாக்களின் அரசியல் பாரம்பரியம் என்பது.

மத்தி போருக்கு உதவுவதால் அதனுடன் பங்கெடுக்கும் கலைஞ்ஞர் கட்சியை கண்டிக்கின்ரார் வைகோ, ஆனால் புலிஅழிப்பை முழுமுதற் கொள்கையாக கொண்டுள்ள கட்சியில் அவர் பங்கெடுக்கின்றார். யார் கட்சி மிகப் பெருந் தீங்கை ஈழத்திற்க்கு தாரை வார்க்கக் காத்திருக்கின்றது என்பதை உணரமாட்டாதவரா அவர்.

ஈழத்திற்க்காகத் துடிக்கும் ஒவ்வொரு இதயமும் அதன் முதற்க்கட்ட காணிக்கையாக செய்ய வேண்டியது கலைஞ்ஞர் ஆட்சியின் பலத்தில் பங்கெடுப்பது ஒன்றுதான், இந்த ஒரு வழியினூடே ஈழத்திற்க்கு விடிவைப் பறிப்பிக்க முடியும் என்றே நாம் நம்ப வேண்டி உள்ளது.

ஈழத்தின்பால் நல்ல உள்ளத்தைக் கொண்டிருப்பவர்களின் பொறுப்பு என்பது ஈழத்தின் விருப்பங்களுக்கு தோளை வளங்குவதே தமது உண்மையான நிலைப்பாட்டிற்க்கு சாட்சியாகும் செயற்பாடுகளாகும். அப்படி அல்லாமல் தம் விருப்பங்களை ஈழத்தின் தோள்களில் சுமப்பித்தல் என்பது பச்சைப் பித்தலாட்டத்தனமான நிலைப்படுகளாகும்.

ஜெயாவின் புலிஎதிர்ப்பு என்ற கொள்கை பல கள்ளங்களின் கலவையால் ஆனது.
ஈழத்தின் ஒட்டுமொத்த உயிரையும் கொல்லத்தக்க பாவத்தால் செய்யப்பட்ட கொள்கைதான் இந்தியாவின் புலிஎதிர்ப்புக் கொள்கை. அந்த மக்களை வெறுக்கின்ற ஜெயா இதையே தனது அதிகார போசிப்பிற்க்கு கருவியாய் பயன்படுத்துவது தமிழிச்சியாய் இராத அவ மனசாட்சிக்கு உறுத்தல் தராத விடயம்.
ஈழத்தின் ஒவ்வொரு இதயத்திலும் தன் உயிரினும் மேலான இடத்தில் வாழ்வது புலிமேல் இயற்கையாக வந்த பாசம் இதை புரியாதவராக ஜெயா இருப்பவர் என்பது அல்ல எங்கள் எண்ணம். தமிழ்உணர்வு என்ற கோட்பாடு மீதிருக்கும் வெறுப்பின் அடிப்படையே அவரிடம் புலிஎதிர்ப்பு என்ற கொள்கையை இனிப்பாகக் காட்டுவது. எனவே ஈழத்தமிழர்கள் தமது வாழ்வின் ஆதரமே புலிகள்தான் என்ற உண்மை ஜெயாவின் முனால் உடைத்துக் காட்டப்படும் போது ஜெயாவின் அடிமனதுக்குள் இருந்து வந்த இரகசியஉண்மை தமிழ் உணவிற்க்கு ஆகாத போக்கு என்பது வலிய தானே வெளிப்படும்.

தேர்வு 1. ஈழத்தவர்கள் ஒட்டு மொத்தமாக புலியை ஆதரிக்கின்றார்கள்.
தேர்வு 2. ஈழத்தவர்கள் ஒட்டு மொத்தமாக புலியை வெறுப்பவர்கள்.

தேர்வு 1 உண்மையானால் ஈழத்திற்க்கு சிங்களத்தை ஒத்த ஒரு எதிரி ஜெயா என்பது முடிவாகிறது.
தேர்வு 2 உண்மையானால் ஜெயாவின் போக்கு ஈழத்திற்க்கு இணக்கமானதாக இருக்கும்
தேர்வு 1 ,2 ம் முடிவு தெரியாத போது முடிவு இதுவாகத்தான் இருக்கும்.
ஈழத்தின் நன்மைகளை இதுவரை சுமந்து அறியாத ஜெயாவின் அரசியல், மக்கள் துன்பங்களுக்கு பாராமுகமாக இருந்துவந்த போக்கும் ஈழத்தை அடிமனதில் இருந்தே வெறுப்பவர் என்பதே வெட்ட வெளிச்சமாகின்ற உண்மை!

No comments: