Friday 17 October 2008

வைகோவை நோக்கிய இந்தக் கேள்விகள்!

உங்கள் பாசத்தில் பழுதைக் காண்பதல்ல எங்கள் நோக்கம்,
அநாதைகள் துன்பத்தை ஆதரித்த உங்கள் தோள்களை
உயிர் பிரியும் வலியில் கூட மறக்கும் இதயங்கள் அல்ல நாங்கள்!
புலியைக் கொல்ல பழிகிடக்கும் கட்சியுடன் சேர்க்கை வைத்தீர்கள்
அதன் விலையாக விளையும் துன்பங்களின்
வலியை அடைகாக்கின்றோம் பாசக் காணிக்கையாக,
ஒருவன் பழி இன்று வரை சொன்னான் இல்லை ஈழத்தில்
உண்மை அன்பிற்க்கு உயிரைக் கொடுத்தல்கூட ஈடு இல்லை அல்லவா?
தன் கையைக் கொண்டே ஈழத்தின் கண்ணைக் குத்துவது போன்றது அல்லவா?
அம்மா கூட்டணியில் உங்கள் கட்சிப் பங்கு சுமக்கப் போகின்ற பாவம்.
உங்கள் கட்சியின் உயிர் மூச்சாய் விளங்கும் கொள்கையில்
மலிந்த அரசியல் செய்யும் உங்கள் கூட்டணியின் போக்கு
உங்கள் கட்சி உறவின் முக்கியத்துவத்தை
காலில் ஒட்டிய தூசிற்க்கு மதிக்கின்றது என்பதை அல்லவா காட்டுகின்றது.
பேச்சுக்களைக் கூட தட்டிக் கேட்க முடியாத உங்கள் முக்கியத்துவத்தின் எடை
அதிகாரத்தில் அம்மாவின் அலங்கோல ஆட்சியை நெறிப்படுத்தவா முடியும்.
நாளும் சாவுகளைக் காணும் மண்ணின் வாழ்விற்க்கு போராட
சிறியளவு காலம் ஆவது உங்கள் உள்ளூர் பிர்ச்சினைகளை மூட்டை கட்டி
எங்களுக்காக மட்டும் உங்கள் அரசியல் உழைத்திட வேண்டுகின்றோம்.


தொடர இருக்கும் பதிவு “ அம்மாபக்தி தமிழன் முதுகுக்கு கத்தி!”

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.