Thursday 7 June 2007

உறங்குநிலையில் இருந்து மீளும் தமிழ்துவேசம்

புலிப்பகையை தனித்து நின்று வெல்லமுடியாது என்ற நிலைமையால் உறங்குநிலையில் வைத்துக் கட்டிக் காக்கப்பட்ட தமிழ்துவேசம் மெதுவாக உயிர்ப்படைகிறது.

கொழும்புத்தமிழர்களின் விரட்டியடிப்பானது, சிங்கள அரசு உலகத்தின் முன் தன் நடுநிலைவேசத்தை தானாகவே கலைக்கத்துணிந்துவிட்டதன் முதற்படி இதுவாகும்.

மக்கள் மனங்களிலேயுள்ள புலிஆதரவுத்தனத்துக்கு எதிரொலியாக, அவர்கள் மனங்களிலே கனன்று கொண்டிருக்கும் பழிவாங்கும் வெறி புலித்தாக்குதலின் பின்னடைவுகளால் நெய்யூற்றப்பட்டு வளர்ந்து எரிகிறது. எனவே இந்த கையாலாகத்தனங்களின் போர் நடவடிக்கைகள் இனிமேல் அப்பாவி இலக்குகள் மீது வெளிக் கண்டனங்களையும் பொருட்படுத்தாது படைஎடுக்கப் போகின்றது.

No comments: