Sunday 17 June 2007

தமிழ்ச் சுரங்கத்தின் ஆண்டிகள் மடம் கட்டுகிறார்கள்!

தமிழ் சுரங்கத்தின் ஆண்டிகள் மடம் கட்டுகிறார்கள்!
இந்தமடத்தின் புலித்துவேசிகள் சிங்களச் செல்வாக்கின் கூடாரத்துக்குள் வாழும் புலித்துவேசிகளை மதிப்பதில்லை.
மாற்று அரசியல்-கொள்கை இல்லாத சிங்களத்தின் அரோகராக்களாம் அவர்களை.
ஒரு ஆண்டியின் பகுத்தறிவு சொல்கிறது இப்படி,
புலிப் போராட்ட வண்டிக்கு தமிழீழம் என்ற குறிக்கோள் இழுக்கும் திறனுக்கு அப்பாற்பட்ட சுமை, இந்தியா என்றவல்லாதிக்கம் அதன் பாதையின் குறுக்கே கிடக்கும் போது தமிழீழம் என்பது வெறும் கனவுதான் என்கிறது.

ரயாகரனின் கைதுக்காலம்
சிறிது வித்தியாசமானதாக இருந்தது, அவர் செய்த புண்ணியம்.
போராட்டக் புரளிகளை புலிகள் களைஎடுத்துக் கொண்டிருந்தகாலம், மக்கள் உணர்வு இந்த நடவடிக்கைகளால் ஓரளவு காயப்பட்டிருந்தது உண்மைதான். ஏன் எனில் அவர்களிடம் புலநாய்வுப்படை ஒன்று இருந்திருக்கவில்லையே முன்கூட்டியே அறிந்திட, இவர்கள் புலிகளையே களையெடுக்கும் இந்திய எஜமானியின் கட்டளையை கையில் வைத்திருந்ததை.
எனவே இவரின் கைதின் போது, வெறும் மாணவன் என்ற கோதாவே கூட்டம் சேர்திருந்தது, அவர் செயற்பாடுகளின் பின்புலம் வெளிக்குத் தெரிந்திருக்கவில்லை, புலிக்குத் தெரிந்தது போல்.
எப்படி விஜிதரனின் அரசியல் கணக்கு வளக்குகள் அம்பலபலதுக்கு வர, அந்த மாணவ சமுதாயம் தன்பாட்டில் பின்வாங்கியதோ, அவ்வாறே இவரது ஆதரவு நிலைமையும் அநாதரவாகத் தொடங்கியது.
இருந்தாலும் அப்பாவிக் கைதுகளுக்கு புலிகளின் கரங்கள் குறைசாட்டப்படவே முடியாதது, என்ற பெருமையை இன்றைய செயல்காளால் கூட நிரூபித்துக் கொண்டிருக்கும் ரயாகரன் நடவடிக்கைகளுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

ஐயா!! மக்கள் ஆதரவு புலிகளை தூக்கிவைத்திருக்கிறதா?
இல்லை மிதித்து வைத்திருக்கிறதா? என்பதை என்பதை; சிங்களமோ, புலிஎதிரிகளோ சொல்லக்கூடாது.
அது அந்த மக்களால் சொல்லப்படுவதுதான் நம்பகமானதாகும். சரி உங்கள் வாதம் புலிப்பயம் தடுக்கும், அவர்கள் நிர்வாகத்துக்குள் என்றால், அரசநிர்வாகத்தின் தேர்தல் முடிவுகளும் புலிகளையேவாரி அணைப்பதை அறியவில்லையா?
சரி அதையும் விட புலத்தில் கடல் போல் மக்கள் வெள்ளம் அவர்கள் ஆதரவை பறைஅறிவிக்கின்றதே!
எனவே உங்களால் முடிந்தால்; புலிஆதரவு என்பது இல்லை என்று முதலில் நிரூபியுங்கள், எனவே பின்பு வரும் உங்கள் புலம்பல்களாவது நம்பகத்தன்மையின் காற்றையாவது தரிசிக்கும். அதைவிடுத்து அரைத்த மாவையே அரைப்பதுபோல் சொன்ன ஒன்றையே வெறும்வாய்க்கு சப்பக் கொடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.
இப்படிக்கு பேச்சிலும் நாகரீகத்தை மதிக்கும்,
தேவன்.

No comments: