Wednesday 27 June 2007

காட்டிக்கொடுப்பின் கண்கட்டி வித்தை!

புலிஎதிர்பின் உழைப்பு குளிர்காய வைக்கப் போவது யாரை?

மக்களையா? சிங்களஇனவாதத்தையா?

ஒரு கோடு பெரிதோ, சிறிதோ ஆக்குவதற்க்கு தேவைப்படப் போவது இன்னொரு கோடே! எனவே நன்மையாலோ, இல்லை தீமையாலோ புலி என்ற கோட்டை பெரிதோ, சிறிதோ ஆக்குவதற்க்கு அந்த இன்னொரு கோடு எங்கே?

உங்கள் கொள்கைகளுக்கு நேர்மை இருந்தால், இன அவலத்துக்கு நிரந்தரமான தீர்வொன்று உங்களால் இனங்காட்டப் பட்டாமலே, புலிதான் மக்களின் துன்பம் என்று முறையிடுவது பொருத்தமாகுமா?

பிறந்த குழந்தைக்கே மரணத்தை தீர்ப்பாய் எழுதும் சிங்களந்தின் இனவாதக் கொடுமையை விட்டு விட்டு. பேச்சுரிமை புலிகளால் மறுக்கப் படுகிறது என்னும் குற்றச்சாட்டுக்குத்தான் அவசர நீதிவேண்டிக் கிடக்கிறதா?

புலிஎதிர்ப்பும் சிங்களத்தை வசை பாடுவது தம் இரகசிய தொடுப்புக்கள் வெளியால் தெரிவதை மறைக்கின்ற நடவடிக்கைதான். இல்லை நீங்கள் புதிதயாய் வசைபாடித்தான் சிங்கள எதிர்ப்புக்கு தமிழரில் கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற நிலைதான் உள்ளதா?

உங்கள் சிங்களவசைபாடலின் பயன் சிங்களத்துக்கு புதிதாய் ஒன்றும் ஆக்கப் போவதில்லை. பதிலுக்கு நன்மை மட்டு உண்டு, அவர்களின் கூலிகள் என்ற நிலையில் புலித்துவேசம் மக்களிடம் விலைப்படுவதைக் காட்டிலும், அரசியல் தொடர்புசார்பிலாக் கருத்து என்ற வேடம் கிடைத்து விடும். அல்லவா உன்கள் புலம்பல்களுக்கு. இதனால் தானே ஒவ்வொரு துரோகக்கூட்டமும் மற்ற துரோகக் கூட்டத்தை சிங்களத்தின் அடிவருடிகளாக முழங்க வேண்டிய தேவை வேறு இருக்கிறது.
தமிழ்வட்டம் தமிழர்களுக்கு விடுகிறது பட்டம்.

எழுத்து சோத்துக்கே என்றாலும் சொல்ல பேருக்கு ஜனனாயகம்.

85 நாட்கள் வவ்வால் பிழைப்புக்கு வஞ்சம் தீர்கக ஜனனாயகம் என்ற வேசம் ஒன்றுதான் கிடைத்ததா?

செஞ்சோலைச் சிறார்களின் மரணத்தில் உலகே வாய் அடைத்து நிற்க்க, புலிஎதிர்ப்புக்கு கதை, வசனம் எழுதிய உங்கள் அயோக்கியபுத்தியை நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.

கருத்தால் புலியை வெல்ல வக்கு இருந்தால் வேண்டுமா? பினாமி, சுனாமி பாஸிசம், புலியிசம்.

1 comment:

Anonymous said...

எல்லாம் வயிற்றுப்பிழப்பு என்னத்த சொல்ல தூ...........